ஆப்நகரம்

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாரா கமல்?: மக்கள் நீதி மய்யம் விளக்கம்!

கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருக்கும் கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்து மக்கள் நீதி மய்யம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 30 Nov 2021, 2:40 pm
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பியுள்ளார். இதனையடுத்து அவருக்கு லேசான இருமல் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னையில் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கமல்ஹாசன்.
Samayam Tamil Kamal Haasan
Kamal Haasan


கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் எனப் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கமல்ஹாசன் அவர்கள் தற்போது கொரோனா சிகிச்சையில் உள்ளார் என்றும் அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கமல்ஹாசன் விரைவில் குணமாகி அடுத்த சில தினங்களில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.

சிம்பு வில்லனுக்கு 'தனுஷ்கோடி' என பெயர் வைத்தது ஏன்?: ரகசியம் உடைத்த வெங்கட் பிரபு!
இதனையடுத்து கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த பழைய புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் கமலின் டிஸ்சார்ஜ் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் அவர்கள் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில், தலைவர் கமல்ஹாசன் அவர்கள் மருத்துவமனையில் இருந்து இன்னும் டிஸ்சார் ஆகவில்லை. ஆனால் நலமுடன் இருக்கிறார். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் வெளியில் உலவும் நிழற்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அப்போலோ மருத்துவமனையில் கால் அறுவைசிகிச்சை முடிந்து தலைவர் வீடு திரும்பியபோது வெளியான புகைப்படம். இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்