ஆப்நகரம்

சேதுபதி இயக்குனருடன் 3வது முறையாக இணைந்த விஜய் சேதுபதி!

சேதுபதி படத்தின் இயக்குனர் எஸ்.யு.அருண்குமாருடன் இணைந்து விஜய் சேதுபதி தனது அடுத்த படத்தில் நடிக்கயிருக்கிறார்.

Samayam Tamil 23 Oct 2018, 3:12 pm
சேதுபதி படத்தின் இயக்குனர் எஸ்.யு.அருண்குமாருடன் இணைந்து விஜய் சேதுபதி தனது அடுத்த படத்தில் நடிக்கயிருக்கிறார்.
Samayam Tamil join


தமிழ் சினிமாவில் அனைத்து ரசிகர்களும் நேசிக்கும் ஹீரோ விஜய் சேதுபதி. எப்போதும் எளிமையாக ரசிகர்களுக்கு முத்தம் கொடுக்கும் அன்பான ஹீரோவாக இருக்கிறார். தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். வருடத்திற்கு 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, வெளியிட்டு வருகிறார்.

விஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணியின் அடுத்த படைப்பு டிசம்பரில் தொடக்கம்

இந்த நிலையில் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.யு.அருண் குமாருடன் 3வது முறையாக இணைந்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க இருக்கிறார். யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எஸ்.என்.ராஜராஜனின் கே புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

தென்காசி மற்றும் குற்றாலம் ஆகிய பகுதிகளைச் சுற்றிலும் 30 நாட்கள் இப்படத்தின் முதல் பகுதி படப்பிடிப்பு நடத்தப்படயிருக்கிறது. தொடர்ந்து தாய்லாந்தில் இப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. படத்தின் பெரும்பாலான பகுதி தாய்லாந்திலேயே படமாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்