ஆப்நகரம்

Sai Pallavi: அச்சச்சோ...!பிரேமம் 2 படத்தில் சாய் பல்லவி இல்லையா?

பிரேமம் 2 படத்தின் இயக்குனர் வித்தியாசமான கதையை உருவாக்க திட்டமிட்டிருப்பதால், எனக்கு வாய்ப்பு வந்தால் மட்டுமே நான் நடிப்பேன் என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 May 2019, 11:55 am
பிரேமம் 2 படத்தின் இயக்குனர் வித்தியாசமான கதையை உருவாக்க திட்டமிட்டிருப்பதால், எனக்கு வாய்ப்பு வந்தால் மட்டுமே நான் நடிப்பேன் என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sai 3


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சாய் பல்லவி. கடந்த 2005ம் ஆண்டு கஸ்தூரி மான் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி நடித்துள்ளார். இதையடுத்து, 2018ம் ஆண்டு தியா என்ற நேரடி தமிழ் படத்தின் மூலம் தமிழில் நடித்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வந்த மாரி 2 படத்தில் நடித்தார். இப்படத்தின் மூலம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படத்தில் நடித்துள்ளார். செல்வராகவன் இயக்கியுள்ள இப்படம் வரும் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், அண்மையில், தனியார் இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்த சாய் பல்லவி கூறுகையில், கடந்த 2015ம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாள படம் பிரேமம். இது தான் முதல் படம்.

இப்படத்தைத் தொடர்ந்து பிரேமம் படத்தின் 2ஆவது பாகம் உருவானால், நடிப்பீர்கள் என்று கேள்வி எழுப்ப, வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட பிரேமம் 2 படத்தை உருவாக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளார் என்றும், ஒருவேளை இப்படத்தில் நடிப்பதற்கு எனக்கு அழைப்பு வந்தால், நான் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி வாய்ப்போ அல்லது அழைப்போ வரவில்லை என்றால், பிரேமம் 2 படத்தில் நடிக்க மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்