ஆப்நகரம்

மலையாள நடிகை கடத்தல் வழக்கு: கைதான திலீப்பிற்கு ஜாமீன் மறுப்பு! கேரள உயர்நீதிமன்றம்

மலையாள நடிகை கடத்தல் வழக்கில் கைதான திலீப்பிற்கு ஜாமீன் வழங்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

TNN 24 Jul 2017, 10:54 am
மலையாள நடிகை கடத்தல் வழக்கில் கைதான திலீப்பிற்கு ஜாமீன் வழங்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
Samayam Tamil malayalam actor abduction case kerala hc denies bail to actor dileep
மலையாள நடிகை கடத்தல் வழக்கு: கைதான திலீப்பிற்கு ஜாமீன் மறுப்பு! கேரள உயர்நீதிமன்றம்


கடந்த பிப்ரவரி மாதம் மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். இதனையடுத்து காவல் நிலையத்தில் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கார் ஓட்டுனர் பல்சர் சுனில், மார்ட்டின், சலீம் மற்றும் பிரதீப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நடிகை கடத்தலுக்கு முக்கிய காரணமாக இருந்த பல்சர் சுனிலிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மலையாள நடிகர் திலீப் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து திலீப்பிடம் நடத்திய 13 மணி நேர விசாரணைக்குப் பின் கடந்த 10ம் தேதி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் திலீப்பிற்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The Kerala HC has denied actor Dileep bail in the Malayalam actor abduction and sexual assault case on Monday.

அடுத்த செய்தி

டிரெண்டிங்