ஆப்நகரம்

பள்ளி சிறுமிகளிடம் தவறாக நடந்துகொண்ட நடிகர் கைது!

மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவி பள்ளி சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

TOI Contributor 1 Sep 2016, 10:38 pm
திருவனந்தபுரம் : மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவி பள்ளி சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். மலையாளப்படங்களில் வில்லனாகவும், தமிழில் கும்கி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீஜித் ரவி மீது பள்ளி சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 14 பள்ளி சிறுமிகள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது, ஸ்ரீஜித் ரவி தனது காரில் நாகரிகமற்ற முறையில் அமர்ந்திருந்ததாகவும், தவறாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட நடிகரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Samayam Tamil malayalam actor detained for misbehaving with children
பள்ளி சிறுமிகளிடம் தவறாக நடந்துகொண்ட நடிகர் கைது!


ஆனால் ஸ்ரீஜித் ரவி தன் மீது சாட்டப்பட்டள்ள குற்றத்தை முற்றிலும் மறுக்கிறார். அந்த இடத்தில் அவரோ, அவரது காரோ இல்லை என்று கூறியுள்ளார். சம்பவம் நடந்த மறுதினம் பள்ளியின் தலைமை ஆசிரியரால் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி சிறுமிகளால் நடிகர் தவறாக அடையாளம் காட்டப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும், சிறுமிகள் புகார் கொடுத்த காரின் எண் நடிகரின் கார் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. காவல்துறை இரண்டு சிறுமிகளை நேரில் அழைத்தும் ஸ்ரீஜித் ரவி தான் குற்றவாளி என்பதை உறுதி செய்துள்ளது. ஆயினும் சரியாக அடையாளம் காட்டப்பட்டார, இல்லை தவறு நடந்துள்ளதா என்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்