ஆப்நகரம்

Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல மலையாள நடிகர்!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் மலையாள நடிகர் ஜெயராம் நடிக்க இருக்கிறார்.

Samayam Tamil 29 Aug 2019, 8:57 pm
கல்கி என்கின்ற கிருஷ்ணமூர்த்தி எழுதிய "பொன்னியின் செல்வன்" என்ற பிரம்மாண்டமான நாவல் வெளிவந்து 70 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த நாவல் ஐந்து பாகங்களாக வெளிப்பட்டிருந்தது. இக்கதை, முழுக்க முழுக்க சோழர்களை மையமாக வைத்து எழுதப்பட்டது.
Samayam Tamil Jayaram Ponniyin Selvan


கதை நகர்த்தப்பட்டிருந்த விதமும் கதாப்பாத்திரங்களின் விரிவுரையும் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டதே பொன்னியின் செல்வனின் வெற்றி என்று சொல்லலாம். எத்தனை முறை படித்தாலும் சலிப்புத்தட்டாத கதை இந்த பொன்னியின் செல்வன். இக்கதையை இயக்குவதற்கு 1960லிருந்து இன்று வரை பல இயக்குநர்கள் முயன்று வருகின்றனர்.

நடிப்புன்னா என்ன? தனுஷ் விளக்கம்!

5 பாகங்களைக் கொண்ட இக்கதையை 3 மணி நேரத்திற்குள் முடிப்பது என்பது இயலாத காரியம். தற்பொழுது இக்கதையை மணிரத்தினம் கையிலெடுத்துள்ளார். தமிழில் அதிகமாக விற்பனையான நாவல் பட்டியலில் பொன்னியின் செல்வன் பெரும்பாலும் முதலிடத்தில் இருக்கும். இந்த நாவலை படமாக்கும் தனது கனவுத்திட்டத்தை இப்போது மீண்டும் கையில் எடுத்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

இந்த நிலையில் இப்படத்தில் நடிப்பதற்காக ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, அமலா பால் மற்றும்ஐஸ்வர்யா லஷ்மி ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். தற்போது இந்தப் படத்தில் நடிக்க பிரபல மலையாள நடிகர் ஜெயராம் ஒப்பந்தமாகியுள்ளார்.

Goundamani: தன்னை கேலி செய்த சிக்சர் பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய கவுண்டமனி!

1993-ல் கோகுலம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார் ஜெயராம். இப்படத்தை இயக்கியவர் பிரபல இயக்குனர் விக்ரமன். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து “முறைமாமன்”, “பெரிய இடத்து மாப்பிளை”, “தெனாலி”, “பஞ்சதந்திரம்”, “சரோஜா”, “துப்பாக்கி” போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவர இருக்கும் “பார்ட்டி” படத்தில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் தன்னுடைய உடல் எடையை அதிகம் குறைத்துள்ளார். இவரது புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவிய நிலையில் இந்த செய்தியை அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தளபதியைப் போல் நடனத்தில் அசத்தும் தளபதியின் மகன்!

அதாவது “பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்” என்று கூறினார். இருப்பினும் அவர் எந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்ற விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டார்.

சில வருடங்களுக்கு முன்பு இப்படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. தற்பொழுது இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரிக்கவுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இயக்குனர் மணிரத்னம், இபடத்திற்கான ஆரம்பகட்ட வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்