ஆப்நகரம்

சனிக்கிழமை இயக்குநர் மரணம், ஞாயிற்றுக்கிழமை பிரபல நடிகர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல மலையாள நடிகர் கலாபவன் ஜெயேஷ் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

Samayam Tamil 11 May 2020, 4:53 pm
கேரளாவை சேர்ந்த கலாபவன் ஜெயேஷ் பாசஞ்சர், சால்ட் அன்ட் பெப்பர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். டிவியில் பல காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர். அவர் மிமிக்ரி கலைஞரும் ஆவார். ஜெயேஷ் கடந்த ஓராண்டு காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.
Samayam Tamil kalabhavan jayesh


இந்நிலையில் கடந்த வாரம் அவரின் உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிர் இழந்தார்.

ஜெயேஷின் மரண செய்தி அறிந்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவரின் குடும்பத்தாருக்கு தங்களின் ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த சனிக்கிழமை மலையாள இயக்குநர் ஜிபிட் ஜார்ஜ்(31) மாரடைப்பால் மரணம் அடைந்தார். மறுநாள் ஜெயேஷ் உயிர் இழந்தார். அடுத்தடுத்து இரண்டு மரண செய்தி வந்ததும் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜெயேஷுக்கு வயது 44. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஜெயேஷுக்கு சுனஜா என்கிற மனைவியும், சிவானி என்கிற மகளும் உள்ளனர். முன்னதாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயேஷின் 5 வயது மகன் சித்தார்த் உயிர் இழந்தார்.

31 வயது இயக்குநர் மாரடைப்பால் மரணம்: போகும் வயதா இது?

அடுத்த செய்தி

டிரெண்டிங்