ஆப்நகரம்

கேரளாவில் இயல்பு நிலை தொடங்கியதால் மலையாள படப்பிடிப்புகள் ஆரம்பம்!

கேரளாவில் தற்போது இயல்பு நிலை தொடங்கி வருவதால் மலையாள படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஆரம்பமாகி வருகின்றன.

Samayam Tamil 29 Aug 2018, 4:51 pm
கேரளாவில் தற்போது இயல்பு நிலை தொடங்கி வருவதால் மலையாள படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஆரம்பமாகி வருகின்றன.
Samayam Tamil shootings


கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரலாறு காணாத மழையால் அந்த மாநிலமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கியது போல சினிமா படப்பிடிப்புகளும் முடங்கின. தங்களது படப்பிடிப்புகளை தொடர முடியாமலும், முடிந்த படங்களை ரிலீஸ் செய்ய முடியாமலும் திண்டாடி வந்தனர். முதற்கட்டமாக தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் அடுத்ததாக நிவாரண பணிகளில் ஈடுபட்டும் வந்தனர்.

இந்தநிலையில் தற்போது கேரளாவில் ஓரளவு இயல்புநிலை திரும்ப ஆரம்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து சில படங்களின் படப்பிடிப்புகள் நேற்றுடன் ஆரம்பமாகின. அதில் மோகன்லால் நடிப்பில் லூசிபர் படத்தை இயக்கி வரும் பிருத்விராஜ், கடந்த சில தினங்களாகவே விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார். அதேபோல குஞ்சாக்கோபோபன், அபர்ணா பாலமுரளி நடிக்கும் அல்லு ராமேந்திரன் படத்தின் படப்பிடிப்பும் துவங்கியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்