ஆப்நகரம்

மகளுக்காக இயக்குனரின் பாலியல் சீண்டலை தாங்கிக்கிட்டேன்: சீரியல் நடிகை அனுபவித்த கொடுமை

தனக்கு இயக்குனர் பாலியல் தொல்லை அளித்ததாக மலையாள சீரியல் நடிகை புகார் கொடுத்துள்ளார்.

Samayam Tamil 10 Jul 2018, 11:51 am
தனக்கு இயக்குனர் பாலியல் தொல்லை அளித்ததாக மலையாள சீரியல் நடிகை புகார் கொடுத்துள்ளார்.
Samayam Tamil Nisha Sarangh 1


பிரபல மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் 650 எபிசோடுகளை கடந்த தொடர் ‘உப்பும் மொளகும்’. இதில் 5 குழந்தைகளுக்கு தாயாக நடித்து வருகிறார் நிஷா சாரங். வெற்றித்தொடராக சென்றாலும், தொடரின் இயக்குனர் உன்னி கிருஷ்ணன் தனக்கு பாலியல் சீண்டல், தொல்லைகள் செய்ததாக நிஷா புகார் தெரிவித்துள்ளார்.


என்ன தொல்லை :
நீங்கள் செய்வது சரியில்லை. நினைப்பது எதுவும் நடக்காது என இயக்குனர் உன்னி கிருஷ்ணனிடம் நிஷா நேரிலேயே கூறிவிட்டதாகவும், தான் நினைத்தது நிறைவேறாத கோபத்தில் படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் உன்னி தன்னை திட்டி வருவதாக கூறியுள்ளார்.


மேலும் ஆபாசமாக போனில் மெஸ்ஸேஜை அனுப்புவது வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும் அவர் எதெற்கெடுத்தாலும் திட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

தான் சீரியலில் நடித்து கிடைக்கும் வருவாயில் தான் என் குடும்பம் நடக்கிறது. அதில் சிறிது சிறிதாக என் மகள் திருமணத்திற்காக சேர்த்து வருகிறேன். என் மகளின் திருமணத்திற்காக தான் நான் இதையெல்லாம் பொறுத்துக் கொண்டேன் என நிஷா தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்