ஆப்நகரம்

பாலிவுட் பக்கம் வரமாட்டேன்: ரசிகர்களை ஏமாற்றும் மல்லிகா ஷெராவத்!

இந்தி மொழி திரைப்படங்களில் இனிமேல் நடிக்க விரும்பவில்லை என, கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார்.

TNN 17 Dec 2016, 2:17 pm
இந்தி மொழி திரைப்படங்களில் இனிமேல் நடிக்க விரும்பவில்லை என, கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil mallika sherawat has no plans to return to bollywood
பாலிவுட் பக்கம் வரமாட்டேன்: ரசிகர்களை ஏமாற்றும் மல்லிகா ஷெராவத்!


இந்தி, தமிழ், தெலுங்கு என பல்வேறு இந்திய மொழி சினிமாப் படங்களிலும் அதிரடி கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து, ரசிகர்களை கிறங்கடித்தவர் #மல்லிகா ஷெராவத். 2002ம் ஆண்டு இந்தி சினிமாவில் கால்பதித்த அவர், இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.

மர்டர், குரு, டர்ட்டி பாலிடிக்ஸ், அக்ல அவுர், தசாவதாரம் உள்பட ஏராளமான படங்களில் நடித்த மல்லிகா ஷெராவத், படிப்படியாக இந்திய சினிமா படங்களில் இருந்து விலகி, ஹாலிவுட் உலகில் கால்பதித்தார். 2005ம் ஆண்டில் ஜாக்கி சான் உடன் தி மித் என்ற படத்தில் நடித்ததன் மூலமாக, சர்வதேச சினிமா உலகில் அங்கீகாரம் பெற்றார்.

இதன்பின்னர், ஹிஸ் உள்ளிட்ட மேலும் சில ஹாலிவுட் படங்களில் நடித்த மல்லிகா ஷெராவத், தற்சமயம் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். 40 வயதாகும் அவர், ஆண் நண்பர் ஒருவரோடு வசித்துவருவதாகவும், விரைவில் அவரையே திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கூறிவருகிறார்.

சமீபத்தில், தனது பிரான்ஸ் வீட்டில் ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த மல்லிகா ஷெராவத்தை, திடீரென சில மர்ம நபர்கள் தாக்கிய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்திய சினிமாப் படங்களில் வரும் நாட்களில் நடிக்கும் திட்டம் இல்லை என்றும், ஹாலிவுட் போன்ற சர்வதேச சினிமாக்கள் மீதே முழு கவனமும் செலுத்தி வருவதாக, மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார்.

இது, அவரது இந்திய ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

Mallika Sherawat has no plans to return to Bollywood.

அடுத்த செய்தி

டிரெண்டிங்