ஆப்நகரம்

படுத்திருந்தால் எனக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்திருக்கும்: பிரபல நடிகை!

அவர்கள் விருப்பப்படி நான் படுக்கைக்குச் சென்றிருந்தால், எனக்கு சினிமா வாய்ப்புகள் அதிகம் வந்திருக்கும் என பிரபல நடிகை மல்லிகா ஷெராவத் ஓப்பனாக பேசியுள்ளார்.

Samayam Tamil 5 Jul 2018, 4:51 pm
அவர்கள் விருப்பப்படி நான் படுக்கைக்குச் சென்றிருந்தால், எனக்கு சினிமா வாய்ப்புகள் அதிகம் வந்திருக்கும் என பிரபல நடிகை மல்லிகா ஷெராவத் ஓப்பனாக பேசியுள்ளார்.
Samayam Tamil Mallika-Sherawa


எல்லா மொழி சினிமா துறையிலும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பல வருடங்களாக இருந்து வருகிறது. ஆனால், தங்களின் பட வாய்ப்புகள் பாதிக்கும் என்பதால் நடிகைகள் தங்கள் வாழ்க்கையில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளியே சொல்லாமல் இருந்து வருகின்றனர்.

சமீபத்தில் கேரள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துக்குப் பின்னர் பல நடிகைகள் தைரியமாக தங்களின் வாழ்க்கையில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து பகிருந்து வருகின்றனர். தற்போது அந்த வரிசையில் மல்லிகா ஷெராவத்தும் சேர்ந்துள்ளார்.

‘மர்டர்’ படம் மூலம் பாலிவுட்டில் ரசிகர்களிடையே இவர் பிரபலமானார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் “என்னுடன் நடத்த நடிகர்கள் என்னை படுக்கைக்கு அழைத்துள்ளனர். அதற்கு நான் மறுத்ததால் பட படங்களில் இருந்து என்னை தூக்கினார்கள். அவர்கள் விருப்பப்படி நான் அவர்களுடன் படுத்திருந்தால் எனக்கும் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.

ஆனால், எனக்கு அதில் சம்மதமில்லை. என் திறமைக்கு கிடைத்த வாய்ப்பே போதும். ‘மர்டர்’ படம் வெளியான போது ஒரு முதியவர் எனக்கு பல தொல்லைகளை கொடுத்தார். அப்போது எனக்கு ஆதரவாக பேச யாரும் வரவில்லை. வெளியில் சொன்னால் என்னையே தப்பாக நினைப்பார்கள் என பயந்தேன்” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்