ஆப்நகரம்

பிரான்ஸ் நாட்டில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட மல்லிகா ஷெராவத்!

இந்திய சினிமா நடிகை மல்லிகா ஷெராவத், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.

TNN 17 Nov 2016, 8:39 pm
இந்திய சினிமா நடிகை மல்லிகா ஷெராவத், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil mallika sherawat reportedly tear gassed and beaten in her paris apartment
பிரான்ஸ் நாட்டில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட மல்லிகா ஷெராவத்!


சர்வதேச நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, நடிகை மல்லிகா ஷெராவத், பாரீஸ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு எடுத்து தங்கியுள்ளார். அவருடன், சிரில் ஆக்ஸன்ஃபன்ஸ் என்ற ஆண் நண்பர் ஒருவரும் தங்கியுள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவரும் இன்று தனிமையில் இருந்தபோது, திடீரென மர்ம நபர்கள் சிலர் அந்த வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

அவர்கள் முகமூடி அணிந்திருந்ததாகவும், தன்னையும், தனது ஆண் நண்பரையும் தாக்கிவிட்டு, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியபின், தப்பியோடி விட்டனர் என்று, மல்லிகா ஷெராவத் பாரீஸ் நகர போலீசில் புகார் செய்துள்ளார்.

சமீபத்தில் ஹாலிவுட் நடிகையான கிம் கார்டாஷியன் இதேபோல, ஆண் நண்பருடன் தனிமையில் இருந்தபோது, மர்ம நபர்களால் வீடு புகுந்து தாக்கப்பட்டார். அதேபோன்ற சம்பவம் மல்லிகா ஷெராவத்துக்கும் நிகழ்ந்துள்ளது. எனவே, ஒரே குற்றவாளிகள் திரும்பத் திரும்ப இத்தகைய வன்முறையில் ஈடுபடுவதாக, போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.

மல்லிகாவை தாக்கிய மர்ம நபர்கள், பணம் அல்லது நகை எதையும் எடுத்துச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Bollywood actress Mallika Sherawat suffered the same fate as Hollywood reality star Kim Kardashian when she was reportedly tear gassed and beaten up by three masked intruders in her Paris apartment.

அடுத்த செய்தி

டிரெண்டிங்