ஆப்நகரம்

வாங்குறது அவ்வளோ..! கொடுக்கிறது இவ்வளோ தானா..! - கோபத்தில் ஷீலா!!

கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் மலையாள நடிகர்கள் நிவாரண நிதிக்கு அளித்தது சில லட்சங்கள்தான் என பிரபல நடிகை ஷீலா கோபத்துடன் பேசியுள்ளார்.

Samayam Tamil 4 Sep 2018, 7:33 pm
கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் மலையாள நடிகர்கள் நிவாரண நிதிக்கு அளித்தது சில லட்சங்கள்தான் என பிரபல நடிகை ஷீலா கோபத்துடன் பேசியுள்ளார்.
Samayam Tamil sheela


1960களில் மற்றும் 70களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஷீலா. இவர் ரஜினியுடன் ‘சந்திரமுகி’ படத்திலும், காமெடி நடிகர் விவேக் ஹீரோவாக நடித்த ‘பாலக்காட்டு மாதவன்’ படத்திலும் நடித்தை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாது.

இந்நிலையில் அவர் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய மலையாள நடிகர்கள் பற்றி மிக கோபமான கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.

கேரள மக்களுக்காக தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் அதிக அளவில் உதவி செய்து வருகின்றனர். படங்களுக்கு கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் மலையாள நடிகர்கள் 4 கோடிக்கு கார் வாங்கி அதில் பயணம் செய்கின்றனர். ஆனால் சொந்த மாநிலத்திற்க வெள்ள நிவாரணத்திற்கு மட்டும் சில லட்சங்களையே கொடுத்திருக்கிறார்கள் என நடிகை ஷீலா மலையாள நடிகர்களை குறை கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்