ஆப்நகரம்

கலைநிகழ்ச்சி நடத்தி நிதிதிரட்ட அபுதாபி செல்லும் மலையாள திரையுலகினர்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக மலையாள திரையுலகினர் அபுதாபியில் கலை நிகழ்ச்சி நடத்தி நிதிதிரட்ட முடிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 27 Nov 2018, 4:51 pm
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கேரளாவில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஏராளமானோர் தங்கள் உடமைகளையும், உயிரையும் இழந்தனர். வெள்ளப் பாதிப்பின் போது 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாமில் தங்கியிருந்தனர். மழை குறைந்ததை தொடர்ந்து முகாமில் தங்கியிருந்தவர்கள் வீடு திரும்பினர்.
Samayam Tamil keralaaa


வரலாறு காணாத இயற்கை பேரிடரால் 483 பேர் உயிரிழந்ததாகவும் 140 பேரைக் காணவில்லை என்றும் 14 லட்சத்து 50 ஆயிரத்து 707 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்து இருந்ததாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

இந்நிலையில் வெள்ள நிவாரணத்துக்காக, அரசியல் பிரமுகர்கள், சினிமா நடிகர், நடிகைகள் உட்பட பல்வேறு தரப்பினர் அம்மாநில முதலமைச் சரைச் சந்தித்து நிவாரண நிதி வழங்கினர். இதற்கிடையே நிவாரண நிதி திரட்ட மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ முடிவு செய்துள்ளது. அதன்படி டிசம்பர் 7 ஆம் தேதி அபுதாபியில் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

இதில் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால், மஞ்சு வாரியர், நிவின் பாலி, துல்கர் சல்மான், பிருத்விராஜ் உட்பட 60 நடிகர், நடிகைகள் பங்கேற்கிறார்கள். இந்த கலைநிகழ்ச்சியில் தமிழ் நடிகர்கள் சிலரும் அபுதாபி செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்