ஆப்நகரம்

ஜாய் மேத்யூ கதையில், கிரிஷ் இயக்கத்தில் நடிக்கிறார் மம்முட்டி!

நடிகர் மம்முட்டி ஜாய் மேத்யூ கதையில், இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

TNN 21 Feb 2017, 8:44 pm
நடிகர் மம்முட்டி ஜாய் மேத்யூ கதையில், இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
Samayam Tamil mamootys next film with director krish
ஜாய் மேத்யூ கதையில், கிரிஷ் இயக்கத்தில் நடிக்கிறார் மம்முட்டி!


மலையாளத்தில் ‘ஷட்டர்’ என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர் ஜாய் மேத்யூ. மேலும் இவர் ‘தேவி’ படத்தில் பிரபுதேவாவுக்கு அப்பாவாக நடித்துள்ளார். இயக்குனர் ஜாய் மேத்யூ இயக்கிய ‘ஷட்டர்’ படத்தில் சீனிவாசன், லால், வினய் போர்ட் ஆகிய மூவரும் நடித்திருந்தார்கள்.

ஊரில் பிரபலமான மனிதன் ஒருவன் விலைமாது ஒருத்தியிடம் சென்று, வெளியே வர முடியாமல் பூட்டிய அறைக்குள் சிக்கிக்கொண்டு, தனது மனைவி குழந்தை மற்றும் ஊராருக்கு தெரிந்தால் மானம் போய்விடுமே என ஒருநாள் முழுவதும் கஷ்டப்படும் சம்பவம்தான் இந்தப் படத்தின் கதை. ஒரு ஷட்டர் மூடிய கடையை வைத்தே இரண்டு மணி நேரம் விறுவிறுப்பாக படத்தை இயக்கியிருந்தார் ஜாய் மேத்யூ. தமிழ் (ஒருநாள் இரவில்), இந்தி, மராத்தி மற்றும் பஞ்சாபி என ஷட்டர் படம் நான்கு மொழிகளில் ரீமேக்கானது.

இப்படி ஒரு வெற்றியை கொடுத்த ஜாய் மேத்யூ, பின்னர் எந்தப் படத்தையும் இயக்காமல், கதையும் எழுதாமல் மிகவும் பிசியான குணச்சித்திர நடிகராக மாறிவிட்டார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் கதை எழுத ஆரம்பித்திருக்கிறாராம்.அவர் எழுதிய கதை மம்முட்டிக்கு பிடித்துப்போக, அதை டெவலப் பண்ண சொல்லிவிட்டாராம். கூடிய விரைவில் ஜாய் மேத்யூ கதையில் கிரிஷ் இயக்கத்தில் மம்முட்டி நடிக்கவுள்ளார்.

Mamooty's next film with Director Krish

அடுத்த செய்தி

டிரெண்டிங்