ஆப்நகரம்

12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்கும் மந்திரா பேடி!

12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்கும் மந்திரா பேடி!

TNN 11 Sep 2016, 5:52 am
2004-ஆம் ஆண்டு வெளியான சிம்புவின் மன்மதன் படத்திற்கு பிறகு தற்போது தமிழ்படத்தில் இருக்கிறார் நடிகை மந்திரா பேடி. அறிமுக இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கும் அடங்காதே படத்தில் ஜிவி பிரகாஷ், சுரபி, சரத்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப்படத்தில் போலீஸ் வேடத்தில் மந்திரா பேடி நடிக்கிறார். இந்த கேரக்டர் வட இந்திய பெண்ணின் கேரக்டர் அல்ல, ஆனால் ரொம்ப ஒல்லியாக அல்லாத, ஓரளவு வயதான கேரக்டர் என்பதால் மந்திரா பேடி சரியாக இருப்பார் என்று தோன்றியதால் அவரை ஒப்பந்தம் செய்ததாக படத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.
Samayam Tamil mandira bedi after 12 years going to act in tamil film
12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்கும் மந்திரா பேடி!


மந்திரா பேடி சரத்குமாரின் ஜோடி இல்லை என்றும், சரத்குமார் படத்தில் அரசியல்வாதியாக நடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சரத்குமாரின் கேரக்டர் தாடியுடன் இருக்கவேண்டும் என்பதால், அவரை தாடி வளர்க்க சொல்லியுள்ளார் இயக்குநர். அவருடைய மகள் ரேயான் திருமணத்திற்கு கூட அவர் தாடி எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்