ஆப்நகரம்

‘அடங்காதே’ படத்தில் போலீஸ் அதிகாரியாக ரீஎண்ட்ரியான மந்த்ரா பேடி!

13 ஆண்டுகள் கழித்து நடிகை மந்த்ரா பேடி ‘அடங்காதே’ படம்மூலம் போலீஸ் அதிகாரியாக ரீஎண்ட்ரியாகிறார்.

TNN 8 Jun 2017, 4:00 pm
13 ஆண்டுகள் கழித்து நடிகை மந்த்ரா பேடி ‘அடங்காதே’ படம்மூலம் போலீஸ் அதிகாரியாக ரீஎண்ட்ரியாகிறார்.
Samayam Tamil mandirabedi act as a police role in adangathey movie
‘அடங்காதே’ படத்தில் போலீஸ் அதிகாரியாக ரீஎண்ட்ரியான மந்த்ரா பேடி!


நடிகை மந்த்ரா பேடி, சிம்பு நடித்த ‘மன்மதன்’ படத்தில் மனநல டாக்டராக நடித்திருந்திருந்தார். இவரை யாரும் கூடிய சீககிரம் மறந்திருக்க முடியாது. இவர் நடித்த படங்களை விட கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பும் முன் இவர் கொடுக்கும் கமெண்ட்ரியை கேட்க என்றே ஒரு கூட்டம் காத்திருக்கும். மந்த்ராபேடி இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது ஒரு தமிழ்ப்படத்தில் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ், சுரபி நடிக்கும் ‘அடங்காதே’ படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்து வருகிறார் மந்த்ராபேடி.

இவர் தனது கேரக்டர் குறித்து கூறுகையில், ‘நான் இந்த படத்தின் முன்னணி நடிகையாக இல்லை என்றாலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது’’ என்றார்.

படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி வருகிறார். இந்த படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். மேலும் தம்பி ராமையா, பிளேட் சங்கர் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை ஸ்ரீக்ரீன் புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்