ஆப்நகரம்

simbu மாநாடு முடிந்ததும் மணிரத்னம் படத்தில் சிம்பு ?

மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை முடித்த பிறகு யாருடன் இணையப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 14 Feb 2020, 2:35 pm
பொன்னியின் செல்வன் படத்தை பிரம்மாண்ட நடிகர்கள் பட்டாளத்தோடு இயக்கி வருகிறார் இயக்குநர் மணிரத்னம். இந்நிலையில், அவர் தனது அடுத்த படத்தில் சிம்புவை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
Samayam Tamil mani simbu


நடிகர் சிம்பு, தனது உடல் எடையை குறைத்த பின், அடுத்தடுத்து திரைப்படங்கள் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சிம்பு தற்போது மாநாடு படத்தின் ஷூட்டிங்கிற்காக தயாராக இருக்கிறார். வரும் 19ம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ்காமாட்சி தயாரிக்கிறார். சிம்புவுடன் இந்த படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே சேர்ந்து நடிக்கிறது.

இந்திய சினிமாவின், முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம், தற்போது மாபெரும் வரலாற்று நாவலைத் தழுவி பொன்னியின் செல்வன் எனும் படத்தை இயக்கி வருகிறார். வெளிநாடு மற்றும் இந்தியாவில் பல இடங்களில் ஷூட்டிங் திட்டமிட்டு, அடுத்த சில மாதங்கள் மிகவும் பிஸியாக இருக்கப்போகிறார் மணிரத்னம். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வரும் இந்த படத்தை அடுத்த வருடம் கோடைக்குள் திரைக்கு கொண்டு வர படக்குழு மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

மாநாடு படத்தை அடுத்து சிம்புவும், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை தொடர்ந்து மணிரத்னமும் வேறொரு படத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாடு படத்தில் நடித்து முடித்து மணிரத்னம் படத்துக்காக காத்திருப்பாரா அல்லது அதற்குள் வேறொரு படம் நடித்து முடிப்பாரா என்பது போல் சிம்பு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்