ஆப்நகரம்

2018 ஜனவரியில் தொடங்கும் மணிரத்னத்தின் புதிய படம்!

இயக்குனர் மணிரத்னம், நான்கு ஹீரோக்களை வைத்து இயக்கும் படம் 2018 ஜனவரியில் தொடங்கவுள்ளது.

TNN 16 Sep 2017, 1:49 pm
இயக்குனர் மணிரத்னம், நான்கு ஹீரோக்களை வைத்து இயக்கும் படம் 2018 ஜனவரியில் தொடங்கவுள்ளது.
Samayam Tamil manirathnams new movie will begins jan 2018
2018 ஜனவரியில் தொடங்கும் மணிரத்னத்தின் புதிய படம்!


மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘காற்று வெளியிடை’ இந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. தற்போது அதிலிருந்து மீள இயக்குனர் மணிரத்னம் தனது அடுத்த படத்தை இயக்கும் பணியை தொடங்கிவிட்டார். தற்போது அதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தில் நான்கு ஹீரோக்கள் நடிக்கவுள்ளனர். அவர்கள் சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்தசாமி மற்றும் பகத் பாசில். அதேபோல் நடிகைகள் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். மற்ற நடிகர், நடிகையர் தேர்வு பட்டியல் பின்னர் வெளியாகும்.

படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படம் இந்நிறுவனம் தயாரிக்கும் 17வது படம் ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்