ஆப்நகரம்

மணிரத்னம் படத்திற்கு மற்றொரு நாயகி தேர்வு

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் 'காற்று வெளியிடை' படத்தின் மற்றொரு கதாநாயகியாக கன்னட நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகியுள்ளார்.

TNN 11 Jul 2016, 3:27 pm
சென்னை: இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் 'காற்று வெளியிடை' படத்தின் மற்றொரு கதாநாயகியாக கன்னட நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகியுள்ளார்.
Samayam Tamil maniratnam gets another talented heroine on board
மணிரத்னம் படத்திற்கு மற்றொரு நாயகி தேர்வு


கன்னட திரையுலகில் கலக்கி வரும் முன்னணி நடிகையான ஷ்ரத்தா ஸ்ரீநாத், மணிரத்னம் படத்துக்கு முன்னதாகவே தமிழில் நடிப்பை தொடங்கிவிட்டார். கேரள நாயகன் நிவின் பாலி நடித்து வரும் சாண்டா மரியா' படத்தின் நாயகியாக நடித்து வருகிறார். 'உலிடவரு கண்டந்தே' என்னும் கன்னட க்ரைம் த்ரில்லர் படத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, 'காற்று வெளியிடை' படப்பிடிப்பில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் விரைவில் இணைவார் என படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கார்த்தி மற்றும் அதிதி ராவ் ஹிதாரி ஜோடி சேர்ந்து நடிக்கும் இப்படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. தொடங்கியுள்ளது.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ரொமேண்டிக் மியூசிக்கல் படமாக உருவகவுள்ள இப்படத்தில் நடிகர் கார்த்தி விமானியாக நடிக்கிறார். இதற்காக கடந்த சில மாதங்களாகவே சிறப்பு பயிற்சி எடுத்து வந்தார். இப்படத்தின் மற்ற கதாப்பாத்திரங்கள் மற்றும் கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்