ஆப்நகரம்

மீண்டும் அதிதிக்கு வாய்ப்பு கொடுத்த மணிரத்னம்!

‘காற்று வெளியிடை’ படத்தை அடுத்து, நடிகை அதிதிக்கு மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

Samayam Tamil 25 Aug 2018, 5:04 pm
‘காற்று வெளியிடை’ படத்தை அடுத்து, நடிகை அதிதிக்கு மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
Samayam Tamil மீண்டும் அதிதிக்கு வாய்ப்பு கொடுத்த மணிரத்னம்!
மீண்டும் அதிதிக்கு வாய்ப்பு கொடுத்த மணிரத்னம்!


இயக்குநர் மணிரத்னம் இந்தியா சினிமாவிலேயே மிகச் சிறந்த ஒரு இயக்குநர். இவர், ஒரு நடைமுறையை பின்பற்றி வருகிறார். தன் படத்தில் நடிக்கும், நடிகர், நடிகையரை தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களில்நடிக்க வைத்து வருகிறார். அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா, ஐஸ்வர்யா போன்றவர்களையே, இதற்கு உதாரணமாக கூறலாம்.

இப்போது, அந்த வாய்ப்பு நடிகை அதிதி ராவுக்கும் கிடைத்துளளது. ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார் அதிதி ராவ். இந்தப் படம், எதிர்பார்த்தபடி வெற்றிபெறவில்லை.

இந்நிலையில் நடிகை அதிதிராவ்வை தனது அடுத்தப்படமான, ‘செக்கச் சிவந்த வானம்‘ படத்திலும் நடிக்க வைத்துள்ளார், மணிரத்னம். இந்த படத்தில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஸ் போன்ற நடிகைகளும் நடிக்கின்றனர். அவருடைய கேரக்டருக்கு இந்தப் படத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.இந்த படத்துக்கு பின், தமிழில், அதிக வாய்ப்புகள் வரும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்