ஆப்நகரம்

படுகைக்கு வர மறுத்தேன் வேலை கிடைக்கவில்லை- மனம் திறந்த மணிரத்னம் நாயகி

படுக்கைக்கு வர மறுத்ததால், வேலை காலி என்ற மணிரத்னம் படத்தில் நடித்த முன்னணி நாயகி ஒருவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

Samayam Tamil 22 Dec 2018, 6:02 pm
பாலியல் துன்புறுத்தலுக்கு மறுப்பு தெரிவித்ததால் 8 மாதங்கள் பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருந்ததாக நடிகை அதிதி ராவ் ஹிதாரி கூறியிருப்பது அடங்கிவிட்ட #MeToo புகாருக்கு மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Samayam Tamil பொங்கல் திருநாள் பரிசு பொருட்கள் தொகுப்புகளை அறிவித்த தமிழக அரசு


திரைத்துறையில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்த மீ டூ இயக்கம் இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக பரபரப்பை ஏற்படுத்தியது. பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பல பிரபலங்கள் தங்களது மீ டூ அனுபவம் குறித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பெரும் புரட்சியை ஏற்படுத்தினர்.


இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை அதிதி ராவ் ஹிதாரியும் தனது மீ டூ அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், தனது ஆரம்ப காலக்கட்டத்தில் தனக்கும் ஒரு மீ டூ சம்பவம் நேர்ந்தது, இதுவா அதுவா என தனக்கு 2 சாய்ஸ்கள் கொடுத்தனர், அவர்களது எதிர்பார்ப்பை மறுத்துவிட்டதால் 8 மாதம் வேலையில்லாமல் இருந்ததாக கூறினார். அச்சம்பவம் தன்னை பெரிதாக பாதிக்காவிட்டாலும், நம்பிக்கை இழந்த நிலையில், தனது மேனேஜர், நண்பர்கள், குடும்பத்தினர் உத்வேகம் அளித்து பக்க பலமாக இருந்தனர் என்றார் அதிதி.

பெண்கள் பணியிடங்களில் தங்களுக்கு நிகழும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து உரிய நேரத்தில் நெருக்கமானவர்களிடமோ, பொது இடத்திலோ பகிர்ந்துக் கொள்ள வேண்டும். மீ டூ பற்றி வெளிப்படையாக பேசத் தொடங்கிவிட்டாலே பிரச்னைக்கு தீர்வு உண்டாகும் என்றும் பெண்களுக்கு அதிதி ராவ் அறிவுரை கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்