ஆப்நகரம்

ரஜினி மகள் அழைப்பை நிராகரித்த மணி ரத்னம்: காரணம் இதுதானாம்

ரஜினியின் மகள் தன் படத்தில் நடிக்க அழைத்ததை மணிரத்னம் நிராகரித்துவிட்டாராம். அவரே கூறியுள்ள காரணம் என்னவென்று பாருங்கள்..

Samayam Tamil 15 Apr 2020, 1:21 pm
மணிரத்னத்தை ஒரு இயக்குனராகத்தான் நம் அனைவருக்கும் தெரியும். அவர் இயக்கிய பல படங்கள் தற்போதும் ரசிகர்களால் பேசப்படுகிறது. அவர் இயக்கத்தில் வெளிவந்த அலை பாயுதே படம் வந்து 20 ஆண்டுகள் ஆவதை ரசிகர்கள் நேற்று கொண்டாடினார்கள்.
Samayam Tamil Mani Ratnam


நேற்று சுஹாசினியின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் அவர் லைவ்வில் ரசிகர்களுடன் பேசினார். அதற்கு முன்பே ரசிகர்கள் வீடியோ வடிவில் கேள்விகளை அனுப்ப வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

அப்போது அலைபாயுதே ஹீரோ மாதவனும் அந்த லைவ்வில் கலந்துகொண்டார். அப்போது அவர்கள் அலைபாயுதே பற்றி பல்வேறு விஷயங்களை பேசினார்கள்.

"நீங்கள் அலைபாயுதே செட்டில் என்னை ஒரு நடிகராக மட்டும் இருக்க விடவில்லை. ஒரு AD போல அனைத்து வேலைகளையும் செய்ய வைத்தீர்கள். சினிமாவின் பல விஷயங்களை உங்களிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்' என மாதவன் கூறினார்.

மேலும் மற்ற படங்களில் மிக சிறிய அளவிலேயே வசனம் வைக்கும் மணிரத்னம் அலைபாயுதே படத்தின் ப்ரோபோசல் சீனில் ஹீரோ பேசும் வசனம் ஏன் ஆறு வரிகளுக்கு இருந்தது என மாதவன் கேள்வி கேட்டார். அதற்கு பதில் கூறிய மணிரத்னம் 'இருவர் படம் பாரு' என தெரிவித்தார்.


மேலும் ரசிகர்கள் மனதில் நிற்கும் படங்களை இயக்கும் மணிரத்னம் ஏன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என மற்றொருவர் கேள்வி கேட்டார். அதற்கு சுஹாசினி "ரஜினியின் மகள் இவரை ஒரு படத்தில் நடிக்க அழைத்தார்' என்ற தகவலை கூறினார்.

"அதற்கு நான் நோ சொல்லிவிட்டேன். ஏனென்றால், நான் நடித்திருந்தால், அதன் பிறகு மீண்டும் படம் இயக்கும்போது மற்ற நடிகர்கள் 'நான் பாத்தேனே நீங்க நடிச்ச அழக' என கூறிவிடுவார்கள். எனக்கு எல்லாம் தெரியும் என நான் தற்போது கூறலாம்" என மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்