ஆப்நகரம்

இது புள்ள: மணிரத்னம் மகனுக்கு குவியும் பாராட்டு

இயக்குநர் மணிரத்னத்தின் மகன் நந்தன் செய்துள்ள காரியம் பற்றிய வீடியோவை பார்த்தவர்கள் அவரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

Samayam Tamil 22 Mar 2020, 2:30 pm
இயக்குநர் மணிரத்னத்தின் மகன் நந்தன் செய்துள்ள காரியம் பற்றிய வீடியோவை பார்த்தவர்கள் அவரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
Samayam Tamil maniratnams son nandan in self quarantine after returning from london
இது புள்ள: மணிரத்னம் மகனுக்கு குவியும் பாராட்டு


கொரோனா வைரஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கிறது. வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோர் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு வலியுறுத்துகிறது. இந்நிலையில் இயக்குநர் மணிரத்னத்தின் மகன் நந்தன் கடந்த 18ம் தேதி லண்டனில் இருந்து சென்னை வந்துள்ளார்.

நந்தன் மணிரத்னம்

சென்னை வந்த நந்தன் தன் நண்பர்கள், உறவினர்கள் என்று யாரையும் பார்க்கச் செல்லவில்லை. நந்தனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது சோதனையில் தெரிய வந்தது. இருப்பினும் அவர் பொறுப்பாக வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பெற்ற தாய் கூட அவர் அருகில் செல்லவில்லை. நந்தன் தான் இருக்கும் அறையை விட்டு வெளியே வருவது இல்லை. இது குறித்த வீடியோவை குஷ்பு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Twitter-KhushbuSundar ❤️

பாராட்டு

நந்தன் தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிந்தும் இப்படி பொறுப்பாக தனிமையில் இருப்பதை பார்த்தவர்கள் அவரை பாராட்டியுள்ளனர். புள்ளைனா இப்படி இருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். வீட்டில் தனிமையில் இருப்பது போர் அடிக்கும் தான் என்றாலும் அதை கடமையாக நினைத்து அனைவரும் செய்தால் நன்றாக இருக்கும்.

தேசிய ஊரடங்கு

கொரோனா வைரஸ் சூழலால் இன்று தேசிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் யாரும் வெளியே வராமல் வீடுகளிலேயே இருக்கிறார்கள். பள்ளிகளுக்கு விடுமுறை விட்டதில் இருந்து தெருவில் அட்டகாசம் செய்த குட்டீஸ்களை கூட இன்று காணவில்லை. தெருக்கள் ஆள் நடமாட்டம் இல்லாமல் அமைதியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்