ஆப்நகரம்

எங்களுக்கு மட்டும் பணம் என்ன வானத்துல இருந்தா வருது?: மஞ்சிமா மோகன் பதிலடி

கொரோனா பரவுவதால் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என மக்களுக்கு அறிவுரை கூறிய மஞ்சிமாவை ஒரு நபர் கிண்டலாக பேசியுள்ளார். அவருக்கு மஞ்சிமா பதிலடி கொடுத்துள்ளார்.

Samayam Tamil 25 Mar 2020, 9:11 am
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை மஞ்சிமா. அதற்கு முன்பு ஒரு வடக்கன் செல்ஃபி என்ற படத்தில் நடித்திருந்த அவருக்கு பெரிய வரவேற்ப்பு கிடைத்தது.
Samayam Tamil Manjima Mohan


அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்துள்ள மஞ்சிமா, தற்போது விஷ்ணு விஷால் ஜோடியாக FIR என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா தொற்று நடவடிக்கையாக படப்பிடிப்புகள் அனைத்தும் சென்ற வாரமே நிறுத்தப்பட்டுவிட்டது. மேலும் இன்று முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனால் மக்கள் அனைவரும் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே இருங்கள் என பிரபலங்கள் பலரும் மக்களளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். ஆனாலும் சிலர் தடையை மீறி வெளியில் சென்று வருகின்றனர் என குற்றச்சாட்டு உள்ளது.

இது பற்றி பேசிய மஞ்சிமா, "வீட்டில் இருப்பதில் மக்களுக்கு என்ன கஷ்டம் என எனக்கு புரியவில்லை. வீட்டிலேயே இருங்கள்" என ட்விட் செய்தார். அதற்கு ஒருவர் "அடியே குந்தாணி சோறு நீயா போடுவ" என கேட்டுள்ளார்.


இதனால் கோபமான மஞ்சிமா அவருக்கு பதில் அளித்துள்ளார். "இப்படியும் சிலர் இருக்கிறார்கள். இது போன்ற ட்விட்களுக்கு நான் வழக்கமாக பதில் அளிக்க மாட்டேன். வீட்டில் இருங்கள் என கூறியதற்கு எனக்கு கிடைத்தது இதுதான். வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருப்பது அவ்வளவு சுலபம் என நீங்கள் நினைத்தால் அது தவறு. எங்களுக்கு மட்டும் பணம் வானத்தில் இருந்து கீழே விழுவதில்லை" என கூறியுள்ளார் அவர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்