ஆப்நகரம்

உணவுக்கு தவித்த திருநங்கைகளுக்கு உதவிய மஞ்சு வாரியர்!

நடிகை மஞ்சு வாரியர் உணவுக்காக தவித்த திருநங்கைகளுக்கு உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 30 Mar 2020, 7:35 am
கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் பலரும் வேலை இன்றியும், வாழ்வாதாரம் முடங்கியும் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான், உணவுக்காக தவித்து வந்த திருநங்கைகளுக்கு மஞ்சு வாரியர் நிதியுதவி அளித்துள்ளதாராம்.
Samayam Tamil manju warrier


அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ள மஞ்சு வாரியர், மலையாளத்தில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவர். அசுரன் படத்தில் தனது அசராத நடிப்பால் பலரது மனதையும் கவர்ந்தவர். இவர் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் 21 ஊரடங்குக்கு ஒத்துழைத்து வீட்டிலேயே இருக்கிறார். இந்நிலையில், திருநங்கைகள் சிலர் உணவு கிடைக்காமல் திண்டாடி வந்துள்ள செய்தி இவருக்கு தெரிந்து, அவர்களுக்கு 35 ஆயிரம் நிதி கொடுத்து உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. சினிமா தொழிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருநங்கைகளின் பாதிப்பை உணர்ந்து உதவி செய்துள்ளார் என அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே சினிமா தொழிலாளர்களுக்காக மஞ்சு வாரியர் 5 லட்சம் கொடுத்து உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சு வாரியர் தற்போது மோகன்லாலின் மரைக்காயர், ஜாக் அண்ட் ஜில் எனும் த்ரில்லர் படங்களில் நடித்து முடித்துவிட்டார். இன்னும் சில படங்களில் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்