ஆப்நகரம்

சினிமாக்காரங்க தீபாவளிக்கு கோர்ட்ல தான் நிப்பாங்க -மனோபாலா

நடிகர் மனோபாலா சமீபத்திய இசை வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் கதை திருட்டு பற்றி சுவராஸ்யமாக பேசினார்.

Samayam Tamil 10 Sep 2019, 4:29 pm
மனோபாலாவை காமெடி நடிகராகவே பலருக்கு தெரியுமென்றாலும் அவர் 40 படங்கள் இயக்கிய இயக்குநர். 1982-ல் வெளியான 'ஆகாய கங்கை' படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர். ரஜினியை வைத்து ஊர்க்காவலன் படத்தை இயக்கி உள்ளார்.
Samayam Tamil 70214940


பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோபாலா கிட்டத்தட்ட 900 படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடந்த படைப்பாளன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு தமிழ் சினிமாவின் கதைத் திருட்டு சம்பவங்கள் பற்றி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது...
'சிநேகன் பேசும்போது, இப்படத்தின் கதை தனக்கு தெரியாது என்றார். நான் படத்தில் நடித்திருக்கிறேன். எனக்கே கதை தெரியாது. படத்தின் இயக்குநருக்காவது கதை தெரியுமான்னு தெரியல. இப்பலாம் வாயில் இருந்தே கதையை திருடிவிடுகிறார்கள். இந்த தீபாவளிக்கு மட்டும் எத்தனை கேஸ் வரபோகுதுன்னு பாருங்க. ஏன்னா நிறைய பேர் இந்த தீபாவளிக்கு கோர்ட்ல தான் நிப்பாங்க என்றார்.
மேலும் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படம் கூட இயக்குனர் பாக்யராஜ் நடித்த 'இன்று போய் நாளை வா' படத்தின் கதை தான். இந்த பிரச்சனையே ஏகப்பட்ட பஞ்சாயத்திற்கு பிறகு தான் முடிவுக்கு வந்துச்சு. கதைத்திருட்டு தான் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பிரச்சனை. படைப்பாளன் படம் திரைக்கு வந்த பிறகு தான் இது படைப்பாளனுக்கு காப்பாளனாக இருக்குமா, இருக்காதானு சொல்ல முடியும்' என்றார்.

தமிழ் சினிமாவில் கதைத்திருட்டு பற்றிய புகார்கள் தற்போது பரவலாக எழுந்து வருகிறது. தீபாவளிக்கு விஜய் நடிப்பில் வெளியாகும் பிகில் படமும் கதைத் திருட்டு வழக்கில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபமாக தாண்டவம், கத்தி, சர்கார், போகன், கோமாளி என்று பல படங்களின் கதைகள் திருடப்பட்டதாக புகார்கள் எழுந்திருந்தன. பாக்கியராஜ் எழுத்தாளர் சங்கத்தில் பொறுப்பேற்ற பிறகு இம்மாதிரி புகார்களில் பாதிக்கப்படும் உதவி இயக்குநர்களுக்கு இழப்பீடு வாங்கி கொடுத்து வருகிறார். ஆனாலும் கதை திருட்டு புகார்களில் சரியான தீர்வு காண முடியாமல் எழுத்தாளர்கள் சங்கம் திணறி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்