ஆப்நகரம்

மது கிடைக்காததால் மனோரமாவின் மகன் தற்கொலைக்கு முயன்றாரா?: உண்மை இதோ

மனோரமாவின் மகன் பூபதி அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டதாக வெளியான தகவல் குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.

Samayam Tamil 9 Apr 2020, 1:13 pm
மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதிக்கு குடிப்பழக்கம் உண்டு. தற்போது கொரோனா பிரச்சனையால் ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் பூபதிக்கு மது கிடைக்கவில்லை. இதையடுத்து அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்ட பூபதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகின.
Samayam Tamil manorama


இந்நிலையில் இது குறித்து பூபதியின் மகனும், டாக்டருமான ராஜராஜன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது,

ஊரடங்கு உத்தரவால் மது கிடைக்கவில்லை. இதையடுத்து அப்பா ஒன்றிரண்டு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு ஓய்வில் இருந்தார். ஆனால் தற்போது தூக்க மாத்திரை கிடைப்பதிலும் பிரச்சனையாக உள்ளது. இதனால் குடியை திடீரென்று ஒரேயடியாக நிறுத்த வேண்டிய நிலை.

அப்படி திடீர் என்று குடியை நிறுத்தினால் நடுக்கம் ஏற்படும். அப்பாவுக்கு அந்த நடுக்கம் அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்.

இந்த உண்மை தெரியாமல் அவர் ஏதோ தற்கொலை செய்ய முயன்றது போன்று செய்தி வெளியிடுகிறார்கள். அவர் தற்போது நன்றாக இருக்கிறார். அதனால் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள மதுக்கடைகளை உடனடியாக திறக்க வேண்டும் என்று மது அருந்துவோர் தொடர்ந்து மாநில அரசை வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தான் பூபதி பற்றிய தகவல் வெளியாகி தீயாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நாள் இப்படியா ஆகணும்?: புலம்பித் தள்ளும் 'மாஸ்டர்' விஜய் ரசிகர்கள்

அடுத்த செய்தி

டிரெண்டிங்