ஆப்நகரம்

பாகுபலி படத்தை விட 10 மடங்கு வசூல் வரும் படம் இருக்கு: ஐடியா கூறும் கட்ஜூ

பாகுபலி 2 படத்தை விட அதிக வசூல் கொடுக்கக்கூடிய படம் இருக்கு என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.

TNN 5 May 2017, 2:15 am
பாகுபலி 2 படத்தை விட அதிக வசூல் கொடுக்கக்கூடிய படம் இருக்கு என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.
Samayam Tamil markandey katju suggests making the planet of cows in india leaves netizens in splits
பாகுபலி படத்தை விட 10 மடங்கு வசூல் வரும் படம் இருக்கு: ஐடியா கூறும் கட்ஜூ


இது தொடர்பாக அவரது வலைபக்கத்தில் கூறியதாவது: ஹாலிவுட்டில், மனிதக் குரங்குகள் பூமியை வெற்றி கொண்டு மனிதர்களை அவற்றின் அடிமைகளாக வைத்திருக்கும் படம் பிளானட் ஆப் தி ஏப்ஸ். இப்படம் ஹாலிவுட்டில் ஹிட்டோ ஹிட். இந்தப் படத்தை அப்படியே தமிழில் பிளானட் ஆப் தி கவ்ஸ் என்று ரீமேக் செய்தால் படம் பாகுபலி2 வை விட 10 மடங்கு வசூல் படைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் பசுக்களுக்காக நடந்து வரும் சண்டைகளும், கொலைகளும் அதிகரித்து வருகிறது. ஒருபுறம் பசுக்கள் கொல்லப்படுவதும், மறுபுறம் பசுக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக குரல் கொடுத்து வருவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இதில், சிலர் மாட்டிறைச்சியை இந்தியாவில் தடை செய்தே தீருவோம் என்று அடக்குமுறையை கையாண்டு வருகின்றனர்.

இவர்களது நோக்கம், பசுக்களையும், மாடுகளையும் பாதுகாப்பது தான். அப்படியென்றால், பாலிவுட் இயக்குனர்கள் பிளானட் ஆப் தி ஏப்ஸ் போல பிளானட் ஆப் தி கவ்ஸ் என்ற படத்தை எடுக்கலாம். அந்தப் படத்தில் பசுக்கள் மனிதர்களை அடிமைகளாக்கி வேலை வாங்கும் சுவாரஸ்யமான காட்சிகள் கிராபிக்ஸ் தொழில் நுட்பத்துடன் கொண்டு வந்தால் பாகுபலி2 படத்தை விட அதிக வசூல் படைக்கும் என்று கட்ஜூ தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்