ஆப்நகரம்

இயக்குனராக மாறிய “பூ” நடிகை பார்வதி!

பிரபல நடிகை ‘பூ’ பார்வதி, தற்போது நடிப்பிலிருந்து விலகி நடிகைகள் ஸ்ரீபிரியா, ரேவதி, கீது மோகன்தாஸ் ஆகியோரைப் போல இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

Samayam Tamil 15 May 2019, 4:10 pm
‘பூ’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி. இவர் தமிழை விட மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வருகிறார்.
Samayam Tamil parvathy


நடிகை பார்வதி தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தவரையில் எந்த பிரச்னையும் இல்லாமல் அவரது நடிப்பு தொழில் நன்றாக போய்கொண்டிருந்தது. மீடூ விவகாரத்தில் சில நடிகர்களை தாக்கி கருத்து தெரிவித்ததையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. தனக்கு வரும் பட வாய்ப்புகளை சிலர் தடுப்பதாக அவரே வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

தான் விரும்பிய கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதிலும் சில சமரசங்கள் செய்து நடிக்க வேண்டியிருந்ததால் திடீரென்று தானே இயக்குனர் ஆவது என்று முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி பார்வதி கூறும்போது, ‘‘மிக விரைவில் நான் டைரக்‌ஷன் செய்ய விருக்கிறேன்.

இதற்கான முடிவை ஏற்கனவே எடுத்து முடித்துவிட்டேன். நடிகையாக எனக்கு இது திரையுலகில் மிக முக்கிய படமாக இருக்கும். எனக்கு முக்கிய படம் என்பதைவிட என்னுள் புதைந்திருக்கும் இயற்கையின் வெளிப்பாடாக இருக்கும்.

நான் படம் இயக்குவது, ஒரு டைரக்டராக என்னை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. நேர்மையாக ஒரு கதையை சொல்ல வேண்டும் என்ற எண்ணமே காரணம்’’ என்றார். நடிகைகள் ஸ்ரீபிரியா, ரேவதி, கீது மோகன்தாஸ் போன்றவர்கள் இயக்குனர்களாகி உள்ளனர். அதேபோல் தற்போது நடிகை ‘பூ’ பார்வதியும் இயக்குனராக மாறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்