ஆப்நகரம்

நலிந்த மூத்த தயாரிப்பாளர்களுக்கு ஒய்வூதியமாக வழங்க இளையராஜா முடிவு!

இளையராஜா நடத்தும் இசை நிகழ்ச்சி மூலம் வரும் பணத்தை நலிந்த மூத்த தயாரிப்பாளர்களுக்கு ஓய்வூதியமாக வழங்க முடிவு செய்துள்ளார் இசைஞானி இளையராஜா.

Samayam Tamil 20 Dec 2018, 6:26 pm
உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டவர் இசைஞானி இளையராஜா. இவர் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். மேலும் அவர் 10 ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் அவரை கவுரவிக்கும் விதமாக இசை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதனை வருகிறது பிப்ரவரி 2,3 தேதிகளில் தயாரிப்பாளர் சங்கம் நடத்துகிறது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
Samayam Tamil ilayaraja


இதில் கலந்துகொள்ள விஜய்காந்த், ரஜினி, கமல், விக்ரம், ஜெயம் ரவி, ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் நேரில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாம். இந்நிகழ்ச்சியின் மூலம் ரூ 10 கோடி பணத்தை, அதனை தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களான நலிந்த மூத்த தயாரிப்பாளர்களுக்கு ஓய்வூதியமாக கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்