ஆப்நகரம்

மாயா கிருஷ்ணன் என்னை தவறான உறவுக்கு அழைத்தார்: நடிகை அனன்யா ராம்பிரசாத்!

நடிகை மாயா கிருஷ்ணன், தன்னை தவறான உறவுக்கு அழைத்ததாக நடிகை அனன்யா ராம்பிரசாத் கூறியுள்ளார்.

Samayam Tamil 1 Nov 2018, 6:23 pm
நடிகை மாயா கிருஷ்ணன் விளம்பர படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் அறிமுகமான முதல் படம் ‘வானவில்வாழ்க்கை’ 2015ல் வெளியானது. மேலும் இவர் தனுஷுடன் ‘தொடரி’ படத்திலும், ஜோதிகாவுடன் ‘மகளிர் மட்டும்’ படத்திலும், சிவகார்த்திகேயனுடன் ‘வேலைக்காரன்’ படத்திலும, ரஜியுடன் ‘2.0’ படத்திலும் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும் நடித்துள்ளார்.
Samayam Tamil ananya-ramprasad


இந்நிலையில், சக நடிகையான அனன்யா ராம்பிரசாத் என்பவர் மாயா கிருஷ்ணன் மீது பாலியல் புகார் தெரிவித்து எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். மாயா எஸ் கிருஷணனால் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களை தன்னுடைய பேஸ்புக்கில் பதிவுட்டுள்ளார் நடிகை அனன்யா.

‘‘நான் அந்த பயங்கரமான சம்பவத்தில் இருந்து தற்போதுதான் மெல்ல, மெல்ல மீண்டு வருகிறேன். நான் அப்போது செக்சுவலாக, மன ரீதியாக, உணர்ச்சி ரீதியாக, பல பாலியல் கொடுமைகளை அனுபவித்திருக்கிறேன்.

கடந்த 2016ல் நடிகை மாயா கிருஷ்ணனை சந்தித்தேன். அப்போது நான் படித்து முடித்திருந்தேன். அந்த சமயத்தில் மாயா சினிமாவில் பிரபலமாக இருந்தார். ஆகையால், ரிகர்சல் சமயத்தில் அவர் என் மீது பாசம் காட்டி, எனக்கு வழிகாட்டியாக இருந்து நிறைய அட்வைஸ் செய்தார். அதனால் அவரை எனக்கு அப்போது பிடித்திருந்தது.

பிறகு இருவரும் அன்பாக பழக ஆரம்பித்தோம். மாயா கிருஷ்ணன் தனியாக தான் வசித்து வந்தார். பின்னர் நானும் அவருடன் தங்க ஆரம்பித்தேன். ஒரே பெட்டில் தூங்கும்போது என்னுடன் அவர் தவறாக நடந்தார். கண்ட இடங்களில் தொடுவது, எனக்கு முத்தம் கொடுப்பது போன்று என்னிடம் தவறாக நடந்து கொண்டார். இதை நான் கண்டித்தேன். அவர் இதெல்லாம் சாதாரண விசயம்தான் என்று என்னிடம் கூறினார்.”

அடுத்த செய்தி

டிரெண்டிங்