ஆப்நகரம்

மீடியா ஜாம்பவான் என்னை பலாத்காரம் செய்தார்: பிரபல சினிமா இயக்குநர் புகார்

மீடியா ஜாம்பவான் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரபல பாகிஸ்தானிய இயக்குநர் ஜம்ஷெத் மகமூது தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 22 Oct 2019, 9:34 am
மீ டூ இயக்கம் சற்று ஓய்ந்துள்ள நேரத்தில் பாகிஸ்தானை சேர்ந்த விருது பெற்ற பிரபல இயக்குநர் ஜம்ஷெத் மகமூது என்கிற ஜாமி ட்விட்டரில் குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.
Samayam Tamil me too


மீ டூ பற்றி தனக்கு நன்றாகத் தெரியும் என்று ஜாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நான் ஏன் மீடூ இயக்கத்தை ஆதரிக்கிறேன்? ஏனென்றால் ஒரு அறைக்குள், பின்னர் நீதிமன்றங்களுக்கு வெளியே, உள்ளே என்ன நடக்கும், பாதிக்கப்பட்டவரின் நிலை எனக்கு நன்றாக தெரியும். காரணம் மீடியா உலகில் உள்ள மிகவும் அதிகாரமிக்க நபரால் நான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன்.


அது நிஜமாகவே எனக்கு நடந்தது. அது நடந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த நபரின் கண்ணை தோண்டி ஏன் எடுக்கவில்லை என்று என்னை நானே திட்டிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவர் என் நெருங்கிய நண்பராக இருந்தார். அவரின் மெகா ஷூட்டுகளை நான் செய்தேன். அதனால் தான் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று நினைக்கிறேன்.

என் நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் தெரிவித்தேன். ஆனால் யாருமே என் பேச்சை நம்பவில்லை. அந்த ஜாம்பவானின் பெயரைச் சொல்லியே நடந்த சம்பவத்தை பலமுறை விவரித்தும் என்னை ஒரு ஜோக்கர் போன்று பார்த்தார்கள்.

மனதளவில் பாதிக்கப்பட்ட நான் அதற்காக சிகிச்சை எடுத்தேன். என் தந்தை இறந்தபோது அந்த ஜாம்பவான் வந்திருந்தார். நான் அப்பாவுக்காக அழ முடியாமல் அந்த நபரின் கண்ணில் படாமல் இருக்க என் வீட்டிலேயே ஓடி ஒளிந்தேன்.

அந்த நபரின் பெயரை சொல்ல இந்நாள் வரை எனக்கு தைரியம் வரவில்லை. அது ரொம்ப கஷ்டம். மீ டூ மீதான நம்பிக்கை போய்க் கொண்டிருப்பதால் நான் தற்போது இதை எழுதுகிறேன். பாதிக்கப்பட்டவர்கள் கூறுவது எல்லாம் உண்மையே என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்