பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மீரா மிதுனை சமூக வலைத்தளங்களில் பலரும் விளாசிக் வருகின்றனர்.
அது மட்டுமின்றி தமிழகத்தில் தனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறி பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.
மும்பையில் தங்கி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் மீரா அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதைத்தொடர்ந்து சமீபத்தில் உயிரிழந்த சுஜித் விவகாரத்தில் தமிழக அரசை கடுமையாகச் சாடினார். இதனால் நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்தனர்.
'பாடல்கள் இல்லை என்பது வரவேற்கத்தக்க மாற்றம்': கைதி படத்தை புகழ்ந்து தள்ளிய மகேஷ் பாபு
இந்த நிலையில் மும்பையிலிருந்த மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பழக்கமான சரவணன் கட்டிய கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார். சேலம் அருகே நடைபெற்ற அதில் மீரா சேலை, தலை நிறைய பூ, பொட்டு என பக்கா ஹோம்லி லுக்கில் இருந்தார்.
அதே போன்று அந்த காஸ்ட்யூமில் ஒரு அசத்தல் வீடியோவை வெளியிட்டுள்ளார். சேலம் பகுதியில் வயலில் நாற்று பறித்துக் கொண்டிருந்த பெண்களிடம் தனக்கும் நாற்று பறிக்க மற்றும் நாற்று நட கற்றுத்தருமாறு கேட்டுள்ளார்.
மீரா விரும்பி கேட்டதை ஏற்று அவர்கள் நடவும் கற்றுக் கொடுத்தனர். அந்த வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். மேலும் இது குறித்து பேசிய மீரா, 'உழவர்களை நம்ப தான் காப்பாற்ற வேண்டும் என்றும் நம் நாட்டை வல்லரசு ஆக வேண்டும். அவர்களை போல் வாழ்க்கையில் ஒரு முறையாவது நாமும் இறங்கி நாற்று நட வேண்டும்' என்று கேட்டுள்ளார்.
Bigil திருட்டு கதை விவகாரம்: அட்லீ மீது புகார் கொடுத்த தெலுங்கு இயக்குநர்!
இதை பார்த்த நெட்டிசன்கள் முதலில் நீங்கள் ஒழுங்காக உடை அணியுங்கள் பிறகு இது போன்று கருத்து தெரிவிக்கலாம் என்று வழக்கம் போல் விளாசியுள்ளனர்.
அது மட்டுமின்றி தமிழகத்தில் தனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறி பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.
மும்பையில் தங்கி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் மீரா அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதைத்தொடர்ந்து சமீபத்தில் உயிரிழந்த சுஜித் விவகாரத்தில் தமிழக அரசை கடுமையாகச் சாடினார். இதனால் நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்தனர்.
'பாடல்கள் இல்லை என்பது வரவேற்கத்தக்க மாற்றம்': கைதி படத்தை புகழ்ந்து தள்ளிய மகேஷ் பாபு
இந்த நிலையில் மும்பையிலிருந்த மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பழக்கமான சரவணன் கட்டிய கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார். சேலம் அருகே நடைபெற்ற அதில் மீரா சேலை, தலை நிறைய பூ, பொட்டு என பக்கா ஹோம்லி லுக்கில் இருந்தார்.
அதே போன்று அந்த காஸ்ட்யூமில் ஒரு அசத்தல் வீடியோவை வெளியிட்டுள்ளார். சேலம் பகுதியில் வயலில் நாற்று பறித்துக் கொண்டிருந்த பெண்களிடம் தனக்கும் நாற்று பறிக்க மற்றும் நாற்று நட கற்றுத்தருமாறு கேட்டுள்ளார்.
மீரா விரும்பி கேட்டதை ஏற்று அவர்கள் நடவும் கற்றுக் கொடுத்தனர். அந்த வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். மேலும் இது குறித்து பேசிய மீரா, 'உழவர்களை நம்ப தான் காப்பாற்ற வேண்டும் என்றும் நம் நாட்டை வல்லரசு ஆக வேண்டும். அவர்களை போல் வாழ்க்கையில் ஒரு முறையாவது நாமும் இறங்கி நாற்று நட வேண்டும்' என்று கேட்டுள்ளார்.
Bigil திருட்டு கதை விவகாரம்: அட்லீ மீது புகார் கொடுத்த தெலுங்கு இயக்குநர்!
இதை பார்த்த நெட்டிசன்கள் முதலில் நீங்கள் ஒழுங்காக உடை அணியுங்கள் பிறகு இது போன்று கருத்து தெரிவிக்கலாம் என்று வழக்கம் போல் விளாசியுள்ளனர்.