ஆப்நகரம்

அட கொடுமையே... அழகிப் போட்டி நடத்த திட்டமிட்ட மீரா மிதுனின் அழகி பட்டம் பறிப்பு!

மிஸ் சவுத் இந்தியா பட்டத்தைல் தவறாக பயன்படுத்தியதாக கூறி மீரா மிதுனுக்கு வழங்கப்பட்ட பட்டம் திரும்பப் பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Samayam Tamil 1 Jun 2019, 5:37 pm

மிஸ் சவுத் இந்தியா பட்டத்தைல் தவறாக பயன்படுத்தியதாக கூறி மீரா மிதுனுக்கு வழங்கப்பட்ட பட்டம் திரும்பப் பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Samayam Tamil Meera Mitun


8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளீட படங்களில் நடித்தவர் மீரா மிதுன். பெங்களூரை சேர்ந்த இவரின் உண்மையான பெயர் தமிழ் செல்வி.

நடிப்பதற்கு முன் மிஸ் குயின் ஆஃப் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா ஆகிய போட்டிகளில் அழகிப்பட்டம் வென்றுள்ளார்.

புகார்:
தமிழ் பெண்களுக்கு அழகிப் போட்டிகளில் அவ்வளவாக வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதால் தமிழ் பெண்களுக்கான அழகிப் போட்டியை ஜூன் 3ம் தேதி நடத்துவதாக ஏற்பாடு செய்திருப்பதாக கடந்த இரு நாட்களுக்கு முன்னர் மீரா மிதுன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அழகிப் போட்டியை நடத்தக் கூடாது என அஜித் ரவி, ஜோ மைக்கேல் ஆகியோர் இணைந்து தன்னை மிரட்டுவதோடு, தன் சமூக வலைத்தள பகத்தை முடக்கி தவறான பதிவை போடுவதாக காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

ஆபாச ஹேக்கர்களிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள்! மீரா மிதுன் புகார்!

அழகி பட்டம் பறிப்பு:
இந்நிலையில் அழகி போட்டி நடத்த மீரா மிதுன் அனுமதி பெறவில்லை என்றும், அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.


இதன் காரணமாக 2016ல் அவருக்கு வழங்கப்பட்ட மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை திரும்பப் பெறுவதாக மிஸ் சவுத் இந்தியா அமைப்பு பகிரங்கமாக அறிவித்துள்ளது. இனி மேல் அந்த பட்டத்தை எங்கும் அவர் பயன்படுத்த அனுமதியில்லை என எச்சரித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்