ஆப்நகரம்

அமிதாப் பச்சன் டுவிட்டர் அக்கவுண்டிலேயே கையவச்ச ஹேக்கர்ஸ்!

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனின் டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 11 Jun 2019, 7:40 am
பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனின் டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil bacchan


பாலிவுட்டில் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் அமிதாப் பச்சன். முதன் முதலாக உயர்ந்த மனிதன் என்ற தமிழ் டப்பிங் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படம், விரைவில் திரைக்கு வரவுள்ளது. சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அமிதாப் பச்சனின் டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. டுவிட்டரில் கிட்டத்தட்ட 37.4 மில்லியன் பேர் பாலோ செய்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஷாருக்கானுக்கு அடுத்த வரிசையில் அதிக பாலோயர்ஸ்களை கொண்டுள்ளார்.

இந்த நிலையில், அமிதாப் பச்சனின் டுவிட்டர் கணக்கை துருக்கி நாட்டைச் சேர்ந்த ஹேக்கர்ஸ் ஹேக் செய்துள்ளனர். அதில், பாகிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கானின் புகைப்படத்தை புரோபைல் படமாக வைத்து பாகிஸ்தான் நாட்டிற்கு ஆதரவாக பல பதிவுகள் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து மும்பை போலீஸ் அதிகாரி கூறுகையில், சைபர் குழு மற்றும் மகாராஷ்டிரா சைபர் குழு ஆகியவற்றிற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த குழு தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் அமிதாப் பச்சனின் டுவிட்டர் கணக்கு சரிசெய்யப்பட்டுவிடும் என்று அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்