ஆப்நகரம்

அசோக் செல்வன் படத்தில் இருந்து வாரிசு நடிகை அவுட், தனுஷ் ஹீரோயின் இன்

ஸ்வாதினி இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்கும் படத்தில் நிஹாரிகாவுக்கு பதில் மேகா ஆகாஷ் நடிக்கவிருக்கிறார்.

Samayam Tamil 11 Sep 2020, 12:15 pm
புதுமுகம் ஸ்வாதினி இயக்கத்தில் அசோக் செல்வன் புதுப்படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளை துவங்கிவிட்டதாக அசோக் செல்வன் கடந்த மே மாதம் அறிவித்தார். இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்க சிரஞ்சீவியின் தம்பி மகள் நிஹாரிகா கொனிடெலாவை ஒப்பந்தம் செய்தார்கள்.
Samayam Tamil megha akash


படப்பிடிப்பை கோடை காலத்தில் துவங்க திட்டமிட்டார்கள். ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கவே ஷூட்டிங்கை திட்டமிட்டபடி துவங்க முடியாமல் போனது. இதற்கிடையே நிஹாரிகாவுக்கும் குண்டூர் ஐ.ஜி.யின் மகன் சைதன்யாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் டிசம்பர் மாதம் அவர்களின் திருமணம் நடக்கவிருக்கிறது.

வாரிசு நடிகைக்கும், ஐ.ஜி. மகனுக்கும் நடந்த நிச்சயதார்த்தம்: வைரல் போட்டோஸ்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு டேட்ஸ் பிரச்சனையை காரணம் காட்டி நிஹாரிகா அசோக் செல்வன் படத்தில் இருந்து வெளியேறியுள்ளார். தயாரிப்பாளரிடம் பேசிய பிறகே நிஹாரிகா இந்த முடிவை எடுத்துள்ளாராம். நிஹாரிகா வெளியேறிய பிறகு மேகா ஆகாஷை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அசோக் செல்வன் படத்தை தயாரிக்கும் செல்வகுமார் கூறியதாவது,

திறமையான நடிகையான மேகா ஆகாஷ் இந்த படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி. இந்த படத்தின் ஹீரோயின் ஸ்டைலாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் பார்க்க பக்கத்து வீட்டு பெண் போன்றும் தெரிய வேண்டும். மேகா ஆகாஷ் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று இயக்குநர் ஸ்வாதினி தெரிவித்தார். அவர் சொன்னது சரி தான்.

லாக்டவுன் தளர்த்தப்பட்டிருப்பது சந்தோஷம். மீண்டும் படப்பிடிப்புகளை துவங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று திரையுலகினர் வைத்த கோரிக்கையை அரசு ஏற்றதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரசு தெரிவித்த விதிமுறைகளை பின்பற்றி படப்பிடிப்பை நடத்துவோம். அக்டோபர் மாதம் படப்பிடிப்பை துவங்கவிருக்கிறோம் என்றார்.

அசோக் செல்வன் படத்தில் நடிப்பது பற்றி மேகா ஆகாஷ் கூறியதாவது,

வித்தியாசமான ஸ்க்ரிப்ட்டுகள், ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரம் இருக்கும் படங்களில் நடிப்பது எந்த ஹீரோயினுக்கும் வரம் தான். அது போன்ற கதாபாத்திரம் கிடைப்பது சாதாரண விஷயம் அல்ல. ஸ்வாதினி என்னிடம் ஸ்க்ரிப்ட்டை சொன்னபோது, என்னால் அந்த கதாபாத்திரத்தை உணர முடிந்தது. இந்த படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு எப்பொழுது துவங்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி வெளியான ஓ மை கடவுளே படம் சூப்பர் ஹிட்டான சந்தோஷத்தில் இருக்கிறார் அசோக் செல்வன். அந்த படத்தில் அவருக்கும், ரித்திகா சிங்கிற்குமான கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்ந்தது. அவர் ரித்திகா சிங்கை நூடுல்ஸ் மண்டை என்று அழைத்தது பிரபலமானது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்