ஆப்நகரம்

பாலியல் தொழில் செய்து வந்ததாக பிரபல நடிகையிடம் அமெரிக்க போலீசார் விசாரணை!

அமெரிக்காவில் பாலியல் தொழில் செய்து வந்ததாக பிரபல நடிகை மெஹ்ரீன் பீர்த்தாவிடம் அமெரிக்க போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

Samayam Tamil 21 Jun 2018, 4:23 pm
அமெரிக்காவில் பாலியல் தொழில் செய்து வந்ததாக பிரபல நடிகை மெஹ்ரீன் பீர்த்தாவிடம் அமெரிக்க போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
Samayam Tamil 7


சினிமா நடிகைகள் பற்றிய சர்ச்சைகளும், அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்னைகளும் தினமும் செய்தியாக வெளியாகின்றன. ஆனால் அதில் சில உண்மையில்லாத செய்திகளும் இருக்கும். நம்பமுடியாத அதிர்ச்சி தரும் செய்திகளும் வரத்தான் செய்கிறது. அண்மையில் தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகைகள் அமெரிக்காவில் பாலியல் தொழில் செய்து வருவதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் பேர் சொல்லப்படாமல் சிலர் இதில் சிக்கினர்.

தற்போது பிரபல நடிகை மெஹ்ரீன் பீர்த்தா சந்தேகத்தின் பேரில் மாட்டிக் கொண்டார். மெஹ்ரீன் இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது தமிழில் உருவாகும் ‘நோட்டா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் மெஹ்ரீன் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அப்போது அவரிடம் அமெரிக்கா போலிசார் பல மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்குப் பின்னர் போதுமான விவரங்கள் கிடைத்த பிறகு அவரை விசாரணையில் இருந்து விடுவித்தார்களாம்.

Mehreen Pirzada Questioned In Connection With The Tollywood SEX Racket

அடுத்த செய்தி

டிரெண்டிங்