ஆப்நகரம்

நாட்டாமை படத்திலேயே இதை செய்துவிட்டார் கே.எஸ்.ரவிக்குமார்: வைரலாகும் கொரோனா மீம்

கொரோனா வைரஸ் பற்றிய மீம்கள் அதிகம் இணையத்தில் வருகின்றன. அதில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பற்றிய மீம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Samayam Tamil 17 Mar 2020, 6:02 pm
கொரோனா வைரஸ் அச்சறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகள் முடங்கியுள்ளன. இந்தியாவிலும் தியேட்டர்கள், மால்கள், கோவில்கள் என பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளன.
Samayam Tamil K.S.Ravikumar


மேலும் மக்கள் யாரும் அதிகம் கூட வேண்டாம் என்றும் கூறியுள்ள அரசு, மற்ற நபர்களிடம் இருந்து social distancing செய்வது அவசியம் என கூறியுள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள் quarantine செய்யப்பட்டு தனிமையில் 14 நாட்கள் இருக்கவேண்டும்.

இந்த இரண்டையும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தன் படங்களில் பல வருடங்கள் முன்பே பயன்படுத்தியுள்ளார் என சில மீம்கள் தற்போது இணையத்தில் உலா வருகின்றன.

நாட்டாமை படத்தில் சரத்குமார் 'இவங்ககூட யாரும் அண்ணம் தண்ணி பொழங்கக்கூடாது" என சொன்னது தான் social distancing என்றும், படையப்பா படத்தில் நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் தன்னை தானே வீட்டின் அறையில் அடைத்து வைத்து கொண்டிருந்தது தான் self quarantine என்றும் அந்த மீன்களில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மீம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் ஆஸ்கர் விருது வென்ற பாரஸைட் படத்தின் கதை கே.எஸ்.ரவிக்குமாரின் மின்சார கண்ணா படத்தின் கதை போல இருக்கிறது என சென்ற மாதம் இணையத்தில் பலரும் பேசினர். அதற்காக பாரஸைட் படம் மீது வழக்கு தொடரப்போவதாக கூறி சர்ச்சை ஏற்படுத்தியிருந்தார் மின்சார கண்ணா பட தயாரிப்பாளர்.

அதை தொடர்ந்து தற்போது கொரோனா விஷயத்திலும் கே.எஸ்.ரவிக்குமார் பற்றி இணையவாசிகள் பேசி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்