ஆப்நகரம்

மீம்ஸ் போடுறவங்க புத்திசாலிகள்:மஞ்சிமா மோகன்!

சமூக வலைதளங்களில் மீம்ஸ் போடுறவங்க புத்திசாலிகள், கற்பனை திறன் கொண்டவர்கள் என்று மஞ்சிமா மோகன் கூறியிருக்கிறார்.

TNN 20 Dec 2017, 3:49 pm
சமூக வலைதளங்களில் மீம்ஸ் போடுறவங்க புத்திசாலிகள், கற்பனை திறன் கொண்டவர்கள் என்று மஞ்சிமா மோகன் கூறியிருக்கிறார்.
Samayam Tamil memes creators are brilliant says actress manjima mohan
மீம்ஸ் போடுறவங்க புத்திசாலிகள்:மஞ்சிமா மோகன்!


சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா என்ற் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இப்படத்தைத் தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதற்கு முன்னதாக மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உடையாடினார். அப்போது பேசிய அவர், தினமும் காலையில் எழுந்தவுடன் என்னுடைய மொபைலைத் தான் தேடுவேன்.

சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை தெரிவிப்பதற்கும், பல பிரச்சனைகளை விமர்சனம் செய்வதற்கும் மீம்ஸ் தான் இப்போது எல்லோரும் உருவாக்குகிறார்கள். மீம்ஸ் போடுவதற்கும் தனி திறமை வேண்டும். அவர்கள் புத்திசாலிகள், அவர்களுக்கு கற்பனை திறன் அதிக இருக்கும் என்று கருதுகிறேன். ஒவ்வொரு முறையும், விஜய் மற்றும் அஜித் இவர்களில் யாரைப் பிடிக்கும் என்றெல்லாம் என்னிடம் கேள்விகள் கேட்கிறார்கள். இதற்கு என்னால், பதில் சொல்ல முடியாது. ஏனென்றால், அவர்களில் ஒருவரை மட்டும் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமானது. இந்த ஆண்டில் வெளிவந்த விக்ரம் வேதா, பாகுபலி 2, மெர்சல், மாநகரம் ஆகிய படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்