ஆப்நகரம்

‘மெர்குரி’யை தன் இசையால் பேச வைத்த சந்தோஷ் நாராயணன்!

டயலாக் இல்லாத ‘மெர்குரி’ படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தன்னுடைய இசையால் பேசவைத்துள்ளார்.

Samayam Tamil 16 Apr 2018, 3:25 pm
டயலாக் இல்லாத ‘மெர்குரி’ படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தன்னுடைய இசையால் பேசவைத்துள்ளார்.
Samayam Tamil mercury-santhosh-narayanan


பிரபுதேவா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெர்குரி’. இந்தப் படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக படம் முழுவதும் டயலாக் இல்லாமல் மோனோ ஆக்டிங் மூலம் நடித்திருக்கிறார். தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பிரபுதேவா ஒரு ஹீரோ என்றால், இசையமைப்பாளர் சந்தோஷ்நாராயணன் இன்னொரு ஹீரோ என்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.

இந்தப் படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், ‘‘படத்திற்கு பின்னணி இசை ரொம்ப முக்கியம் என்பதால் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்தேன். அதற்கேற்றார் போன்று அவர் காட்சிக்கு தகுந்தபடி தனது இசையால் படத்தை பேச வைத்துள்ளார். அந்த வகையில், படத்தில் டயலாக் இல்லாத குறையை அவர் நிவர்த்தி செய்து விட்டார்’’ என்றார் கார்த்திக் சுப்பராஜ்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்