ஆப்நகரம்

#MeToo: பாலியல் சீண்டலுக்கு ஆளானவர்களின் புகாருக்கு மதிப்பளித்தால் மட்டுமே இது சாத்தியம் - சுஷ்மிதா சென்!

புதுடெல்லி: பாலியல் சீண்டலுக்கு ஆளானவர்களின் குற்றச்சாட்டிற்கு செவிமடுக்க வேண்டும் என்று நடிகை சுஷ்மிதா சென் வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 11 Oct 2018, 11:30 pm
சமூக வலைத்தளங்களில் #MeToo என்ற பெயரில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்து ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.
Samayam Tamil Sushmita_Sen


இதுதொடர்பாக ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், மேற்கத்திய நாடுகளில் இருந்து #MeToo விழிப்புணர்வை நாம் பின்பற்றினாலும், இது அலட்சியப்படுத்தக் கூடிய ஒன்றல்ல.

பெண்கள் தாமாக முன்வந்து தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்து கருத்துகள் தெரிவிப்பது மிகவும் பாராட்டக்கூடியது. அவ்வாறு குற்றச்சாட்டு தெரிவிப்பவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பது நமது சமூகத்தின் கடமை.

அதேசமயம் அவர்களை இதைவைத்து எடைப் போடக்கூடாது. அவர்களைப் புறக்கணிப்பதை விட்டுவிட்டு, ஊக்கப்படுத்த வேண்டும். இந்த விழிப்புணர்வு பிரச்சாரம், பாதிக்கப்பட்டவர்களின் புகாருக்கு செவிமடுக்கும் போது மட்டுமே வெற்றி பெறும்.

MeToo movement will work only if we start listening to the victims, says Sushmita Sen.

அடுத்த செய்தி

டிரெண்டிங்