ஆப்நகரம்

தனுஸ்ரீ தத்தா ஒரு லெஸ்பியன், என்னை பலாத்காரம் செய்துவிட்டார்: ராக்கி சாவந்த் பகீர்!

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், தனுஸ்ரீ தத்தா என்னை பலாத்காரம் செய்துவிட்டார் என்று ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

Samayam Tamil 26 Oct 2018, 4:03 pm
இந்தி நடிகையான தனுஸ்ரீ தத்தா தமிழில் விஷாலுடன் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் அறிமுகமானார் அதையடுத்து அவர் தமிழில் நடிக்கவில்லை. இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தா, பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்தி நடிகர் நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறினார்.
Samayam Tamil tanushree


இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை, ராக்கி சாவந்த், தனுஸ்ரீ தத்தா தம்மை பலாத்காரம் செய்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.‘‘ஒருநாள் நான் இரவு விருந்து நிகழ்ச்சிக்கு சென்றேன். அப்போது தனுஸ்ரீ என் வாயில் சிகரெட்டைவலுக்கட்டாயமாக திணித்து புகைக்க வைத்தார். மேலும் அவர் ஓரினச் சேர்க்கையாளர். அவருக்கு ஆண்களை கண்டால் பிடிக்காது.

பெண்களை மட்டுமே அவருடைய ஆசைக்குப் பயன்படுத்துவார். இதே போல ஒரு நாள் என்னையும் தனுஸ்ரீ தத்தா பலாத்காரம் செய்து விட்டார். இதனை நீதிமன்றத்தில் கூறி உரிய தண்டனை அவருக்கு வாங்கி கொடுக்க உள்ளேன்’’ என்று ராக்கி சாவந்த் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்