ஆப்நகரம்

கலக்கும் பிரியா பவானி சங்கர்: அதிர்ச்சியில் முன்னனி நடிகைகள்!!

சீரியல் நடிகையான ப்ரியா பவானி சங்கர், விக்ரம் நடிப்பில் உருவாகும் 58ஆவது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 23 Jul 2019, 6:42 pm
பிரியா பவானி சங்கர் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். வளர்ந்து வரும் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த அவர் முதல் முறையாக முன்னணி ஹீரோவான விக்ரமுடன் ஜோடியாக நடிப்பதாக தகவல் வந்துள்ளது. கடாரம் கொண்டான் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்க இருக்கும் படத்தை இயக்கவுள்ளார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. “டிமாண்டி காலனி “இமைக்கா நொடிகள் என்று மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து. அவர் விக்ரம் 58 படத்தை இயக்கப் போவதாகவும் அதில் விக்ரமுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கரை அணுகியதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.
Samayam Tamil shankar


பிரியா பவானி ஷங்கர் ஆரம்பகட்டத்தில் செய்தி வாசிப்பாளராக, பிறகு சீரியல் நடிகையாக மக்களிடம் பாராட்டுப் பெற்றவர். “மேயாதமான்”, “கடைக்குட்டி சிங்கம்”, “மான்ஸ்டர்” என்று தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். இவருடைய நடிப்புத்திறமையை பார்த்து பல முன்னணி இயக்குனர்கள் இவரை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த வருடம் மட்டும் 6 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கும் பிரியா பவானி சங்கர் தற்பொழுது விக்ரம் 58 படத்திலும் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்ய உள்ளனர். இப்படத்திற்கு இசைப்புயல் A R ரகுமான் இசையமைக்கிறார். வசனம் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதவுள்ளார். படப்பிடிப்பு அடுத்த மாதம் ஐரோப்பா மற்றும் கனடாவில் நடைபெறவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

பிரியா பவானி சங்கர் தமிழின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறுகிய காலத்தில் இவரது வளர்ச்சியை கண்டு முன்னணி கதாநாயகிகள் கலக்கம் அடைந்து வருகின்றனர்.


அடுத்த செய்தி

டிரெண்டிங்