ஆப்நகரம்

அஜித்தை தொடர்ந்து கொரோனாவுக்காக ரூ.50 லட்சம் அளித்த மோகன்லால்

கொரோனா நிவாரண பணிகளுக்காக மலையாள நடிகர் மோகன்லால் 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

Samayam Tamil 7 Apr 2020, 7:27 pm
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அரசுக்கு நிதி உதவி வழங்க முன்வரவேண்டும் என தமிழ்நாடு முதல்வர் இன்று மீண்டும் கோரிக்கை வைத்திருந்தார்.
Samayam Tamil Mohanlal


அதனை ஏற்று நடிகர் அஜித் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். அது மட்டுமின்றி அவர் பிரதமரின் PM Cares நிதிக்கு 50 லட்சம் ரூபாயை அளித்துள்ளார்.

அதனை தொடர்ந்து தற்போது மலையாள நடிகர் மோகன்லால் தன் பங்கிற்கு கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார்.

இது பற்றி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் "இது மிகவும் கடினமான நேரம். கொரோனா வைரஸை சமாளிக்க நீங்கள் எடுத்து வரும் முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம். இந்த நெருக்கடியான நேரத்தில் உங்கள் தலைமை பற்றி வரலாறு நிச்சயம் பேசும்."

"முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நான் அனுப்பியுள்ள 50 லட்சம் ரூபாயை ஏற்றுக்கொள்ளுங்கள். அதை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பயன்படுத்துங்கள்" என கேட்டுக்கொண்டுள்ளார்.


மோகன்லால் ஏற்கனவே கொரோனாவால் வேலை இழந்த சினிமா தொழிலாளர்களுக்காக 10 லட்சம் ருபாய் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்