ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கும் மரக்கார் அரபிக்கடலின்டே சிம்மம் படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது. முன்னதாக அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் மோகன்லால் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர் சிம்புவின் மாநாடு படம் வெற்றி அடைந்தது பற்றி பெருமையாக பேசினார். மாநாடு படத்தின் ஹீரோயினான கல்யாணி ப்ரியதர்ஷன் மோகன்லாலின் நெருங்கிய நண்பரின் மகள். அதனால் தன் மகள் போன்றவரின் படம் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் இருக்கிறார் மோகன்லால்.
மாநாடு பற்றி மோகன்லால் பேசியதை பார்த்த சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மோகன்லாலின் மரக்கார் அரபிக்கடலின்டே சிம்மம் வெற்றி பெற்ற வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
மரக்கார் அரபிக்கடலின்டே சிம்மம் 5 மொழிகளில் ரிலீஸாகியிருக்கிறது. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அந்த படம் வசூலில் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே வெளியான மாநாடு படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர். டைம் லூப்பை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட மாநாட்டை பிளாக்பஸ்டராக்கியதற்கு படக்குழு நன்றி தெரிவித்தது.
சிம்புவும் நன்றி தெரிவித்து தனியாக அறிக்கை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாடு பற்றி மோகன்லால் பேசியதை பார்த்த சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மோகன்லாலின் மரக்கார் அரபிக்கடலின்டே சிம்மம் வெற்றி பெற்ற வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
மரக்கார் அரபிக்கடலின்டே சிம்மம் 5 மொழிகளில் ரிலீஸாகியிருக்கிறது. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அந்த படம் வசூலில் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே வெளியான மாநாடு படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர். டைம் லூப்பை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட மாநாட்டை பிளாக்பஸ்டராக்கியதற்கு படக்குழு நன்றி தெரிவித்தது.
சிம்புவும் நன்றி தெரிவித்து தனியாக அறிக்கை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.