ஆப்நகரம்

மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் மீனா

ரஜினியின் அண்ணாத்த படத்திற்கு பிறகு மீனா, அடுத்து மோகன்லால் ஜோடியாக திரிஷ்யம் 2ம் பாகத்தில் நடிக்க உள்ளார்.

Samayam Tamil 16 Sep 2020, 12:35 pm
தமிழ் சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பல படங்களில் நடித்து அதற்கு பிறகு ஹீரோயினாகவும் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருப்பவர் மீனா. 90களில் துவங்கி அவர் அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடித்து இருக்கிறார்.
Samayam Tamil Meena


தற்போது குணசித்திர வேடங்களில் மட்டும் நடிப்பதில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் மீனா நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது அடுத்த படமும் உறுதியாகி உள்ளது. மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் ஜோடியாக தான் அடுத்து மீனா நடிக்க உள்ளார்.

2014ல் மலையாளத்தில் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆன திரிஷ்யம் படத்தில் மோகன்லால் மனைவியாக அவர் நடித்து இருந்தார். அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகும் நிலையில் அதில் மீனா நடிப்பதும் உறுதி ஆகி இருக்கிறது. இதனை மோகன்லால் தான் ட்விட்டரில் அறிவித்து இருக்கிறார்.

இன்று மீனாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய மோகன்லால், திரிஷ்யம் 2 படத்தின் செட்டிற்கு உங்களை வரவேற்கிறேன் என குறிப்பிட்டு உள்ளார்.


திரிஷ்யம் பட கதைக்கு பிறகு 7 வருடங்கள் கழித்து நடப்பது போல தான் இரண்டாம் பாகத்தின் கதையும் எழுதி உள்ளாராம் ஜீத்து ஜோசப். மீனா மட்டுமின்றி எஸ்தர் அணில், அன்சிபா ஹாசன் ஆகியோரும் இதில் நடிக்கிறார்கள்.

ஜீத்து ஜோசப் இயக்கிய திரிஷ்யம் படம் மெகா ஹிட் ஆன நிலையில் அதனை தமிழ், தெலுங்கு, ஹிந்த உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்தனர். ரீமேக் படங்களும் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ரீமேக்கில் கமல் ஹாசன், கெளதமி, நிவேதா தாமஸ் உள்ளிட்டவர்கள் நடித்து இருந்தனர். பாபநாசம் என பெயரிடப்பட்டு இருந்த இந்த பாடத்தினை மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் தான் இயக்கி இருந்தார். அதனை தொடர்ந்து தமிழில் சென்ற வருடம் வெளிவந்த தம்பி என்ற படத்தினை அவர் இயக்கினார். ஜோதிகா, கார்த்தி, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தது.

அதற்கு பிறகு மோகன்லால் நடிப்பில் ராம் என்ற மலையாள படத்தினை ஜீத்து ஜோசப் இயக்க துவங்கினர். அந்த படத்தில் த்ரிஷா தான் ஹீரோயினாக நடித்து வருகிறார். அந்த படம் இறுதிக்கட்டத்தில் இருந்த நேரத்தில் தான் கொரோனா காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டு உள்ளது. அதன் ஷூட்டிங் முடிவடையாத நிலையில் அடுத்து மோகன்லாலுடன் திரிஷ்யம் இரண்டாம் பாகத்திற்காக இணையப்போவதாக அவர் அறிவித்தார். அதை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள். மோகன்லால் பிறந்தநாள் அன்று டீசரும் வெளியிடப்பட்டு இருந்தது.

இரண்டாம் பாகம் எடுக்க இத்தனை வருடங்கள் தாமதம் ஆனது ஏன் என ஜீத்து ஜோசப் அளித்திருந்த பேட்டியில், "திரிஷ்யம் போன்ற பவர்ஃபுல் ஆன படத்திற்கு இரண்டாம் பாகம் கதை எழுதுவது மிக குறைந்த காலத்தில் இயலாத காரியம். நீண்ட காலமாக என் மனதில் இருந்தது. நான்கு - ஐந்து வருடங்களாகவே யோசனை என் மனதில் இருந்தது. முதலில் நான் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டாம் என்று கூட முடிவெடுத்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்