ஆப்நகரம்

“இசைஞானிக்கு பணம் ஒரு பொருட்டே அல்ல” : பழைய சம்பவங்களை நினைவுகூறும் இயக்குநர்கள்!

“இசைஞானிக்கு பணம் ஒரு பொருட்டே அல்ல” : பழைய சம்பவங்களை நினைவுகூறும் இயக்குநர்கள்!

TOI Contributor 22 Mar 2017, 10:01 pm
இசைஞானிக்கு பணம் ஒரு பொருட்டே அல்ல என்று நடிகர் பிரதாப்போத்தனும், இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரும் முன்னாள் சம்பவத்தை நினைவுகூர்ந்தனர்.
Samayam Tamil money doesnt matter for maestro ilayaraja saya pratab pothan and rv udhayakumar
“இசைஞானிக்கு பணம் ஒரு பொருட்டே அல்ல” : பழைய சம்பவங்களை நினைவுகூறும் இயக்குநர்கள்!


இசைஞானி இளையராஜா தன் பாடல்களை பாடக்கூடாது என்று எஸ்.பி.பிக்கு அனுப்பிய நோட்டிஸ் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. இணையவாசிகள் பலரும் இளையராஜாவுக்கு பணத்தாசை பிடித்து விட்டது என்று குற்றம்சாட்டி வருகின்றனர். இதுபற்றி தொலைக்காட்சிகளிலும் விவாதமாக மாறிவிட்டது.

ஆனால் இளையராஜா எப்படிப்பட்டவர் என நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் நினைவு கூர்ந்துள்ளார். ‘‘என்னுடைய முதல் படமான ‘மீண்டும் ஒரு காதல் கதை’ படத்துக்கு இலவசமாகத்தான் இசையமைத்துக் கொடுத்தார் இளையராஜா. இளையராஜாவை வேறு எவரோடும் ஒப்பிட வேண்டாம். அவர் ஜீனியஸ்.. பெரிய மேதை. அவரது இசைக் கோர்ப்புகளில்தான் அத்தனை பேரும் வாழ்கிறார்கள். அவரது மேதைமையை யாரும் மறுக்க வேண்டாம்,” என்று கூறியுள்ளார். இந்தப் படத்தில் பாடிய எஸ்பிபி உள்ளிட்ட அத்தனைப் பேருக்கும் சம்பளம் கிடைக்கச் செய்த இளையராஜா, தான் மட்டும் சம்பளம் வாங்கிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவின் இசையில் பெரிய வெற்றிப் படங்கள் தந்த ஆர்வி உதயகுமார் கூறுகையில், “ராஜா சார் பணத்தை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளமாட்டார். என் படங்களில் கதையும் சூழலும்தான் அவருக்குப் பெரிதே தவிர, பணம் பெரிதல்ல. அவர் இன்றைக்கும் பிஸிதான். அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு பணம் வாங்காமல் இசையமைத்துக் கொடுத்திருக்கிறார் என்பதை என்னைப் போன்றவர்கள் மறக்க முடியாது,” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்