ஆப்நகரம்

போலி ஆவணங்கள் கொடுத்து வங்கியில் பண மோசடி செய்த ‘ஈரம்’ பட நடிகை!

வங்கியில் போலி ஆவணங்களை கொடுத்து ரூ. 36 லட்சம் பண மோசடி செய்துள்ளார் ‘ஈரம்’ பட நடிகை சிந்துமேனன்.

Samayam Tamil 12 Mar 2018, 2:15 pm
வங்கியில் போலி ஆவணங்களை கொடுத்து ரூ. 36 லட்சம் பண மோசடி செய்துள்ளார் ‘ஈரம்’ பட நடிகை சிந்துமேனன்.
Samayam Tamil money fraudulent eeram film actress
போலி ஆவணங்கள் கொடுத்து வங்கியில் பண மோசடி செய்த ‘ஈரம்’ பட நடிகை!


‘ஈரம்‘, ‘சமுத்திரம்’, ‘கடல்பூக்கள்’ உட்பட 25க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சிந்துமேனன். ‘பேங்க் ஆப் பரோடா’ வங்கியில் தனது சகோதரர் வாங்கிய ரூ.36 லட்சம் கடனுக்கு தன்னுடைய சொத்துக்களின் ஆவணங்களை கொடுத்திருந்தாராம். ஆனால் அந்த ஆவணங்கள் போலியானவை என்று தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் சிந்துமேனன் சகோதரை கைது செய்து விசாரணை செய்து வரும் போலிசார், லண்டனை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து அங்கேயே செட்டிலாகிவிட்ட சிந்துமேனனையும் இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்