சொடுக்கு போட்டு சவால் விட்ட இமானின் மாஜி மனைவி: பரபரப்பை கிளப்பும் பிரபலம்.!
இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி மோனிகா குறித்து பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை கிளப்பியுள்ளது.
Samayam Tamil 24 May 2022, 7:34 am
பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளரான டி. இமான் தனது மனைவியை விவாகரத்து செய்து உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதனை தொடர்ந்து அண்மையில் மறுமணமும் செய்தார். இந்நிலையில் இமானின் மாஜி மனைவி சோசியல் மீடியாவில் பதிவிடும் கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் டி,இமானுக்கும், மோனிகா ரிச்சர்டு என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தச் சூழலில், சில மாதங்களுக்கு முன்பு சட்ட ரீதியாகத் தனது மனைவியைப் பிரிந்துவிட்டதாக ட்விட்டர் மூலம் அறிவித்தார் இமான்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இது தொடர்பாக அவர் தன்னுடைய பதிவில், என்னுடைய நல விரும்பிகள் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் நான் ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வாழ்க்கை என்பது பல்வேறு பாதைகளை கொண்டது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். நானும் எனது மனைவி மோனிகா ரிச்சர்ட் அவர்களும் சட்டபூர்வமாக கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். நாங்கள் இருவரும் இனிமேல் கணவன் மனைவி அல்ல என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இமான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக எமிலி என்ற பெண்ணை மறுமணம் செய்துகொண்டார். இதனை விமர்சித்து இமானின் மாஜி மனைவி, 12 ஆண்டுகளாக உனக்காக வாழ்ந்த என்னை மறந்து விட முடியுமா, உங்களை போன்ற நபருடன் என் நேரத்தை வீணடித்த நான் ஒரு முட்டாள்தனம் என பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதிவு சோசியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில் பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கை குறித்து பேசி வரும் பயில்வான் ரங்கநாதன் இமானுக்கு அவரின் மாஜி மனைவி சவால் விட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது, தானும் இன்னொரு திருமணம் செய்து கொண்டு தேவைப்பட்டால் குழந்தைகள் பெற்றுக் கொள்வேன் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. மோனிகா குறித்து பயில்வான் இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.